Wednesday 11 July 2012

டாப்ஸிக்காக 'காதல்' பைட்!

டாப்ஸிக்காக 'காதல்' பைட்!

ரீல் அல்ல ரியல்!
டாப்ஸிக்காக நடந்த கும்மாங்குத்து இது!
கடந்த 8-ம் தேதி இரவு, சினிமா நட்சத்திரங்களுக்கு தன்னுடைய லாயிட்ஸ் ரோடு பங்களாவில் பார்ட்டி கொடுத்தார் ஃபைனான் சியர் பிரதாப்தானே. அந்த விருந்தில் நடிகை டாப்ஸி, மோகன் பாபுவின் மகன் மனோஜ், மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த நேரம், தயாநிதி அழகிரியின் நண்பர் 'மங்காத்தா’ மஹத் விசிட் செய்தார். மனோஜுடன் பேசிக்கொண்டு இருந்த டாப்ஸியிடம் போய் காதல்மொழி பேசி இருக்கிறார். உடனே, ஆத்திரமான மனோஜ் ப்ளஸ் நண்பர்கள் மஹத்தின் மீது பாய்ந்து அடித்துத் துவைத்திருக்கிறார்கள். காயம் அடைந்த மஹத்,  ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், மனோஜ் அவரது அக்கா லட்சுமி மஞ்சு ஆகியோர் மீது புகார் கொடுக்க... கோலிவுட், டாலிவுட் பற்றி எரிகிறது.
என்னதான் நடந்ததாம்? இரண்டு தரப்புக்கும் பொதுவானவர் களிடம் பேசினோம். ''தயாநிதி அழகிரி, 'ஆடுகளம்’ படத்தைத் தயாரித்தபோதே மஹத் - டாப்ஸி காதல் பூத்தது. இருவரும் ஒன்றாகவே ஊர் சுற்றினர். கல்யாணம் செய்துகொள்ளும் அளவுக்கு டாப்ஸியை வெறித்தனமாக நேசித்தார் மஹத். டாப்ஸிக்காகத்தான், நடிக்கும் முயற்சியில் இறங்கினார் மஹத். அஜீத் நடித்த 'மங்காத்தா’ படத்தில் பிரேம்ஜியுடன் நடித்தார். டாப்ஸி தெலுங்குப் படத்தில் பிஸியான பிறகும், அடிக்கடி ஹைதராபாத் பறந்து தனது காதலை டெவலப் செய்தார் மஹத். ஒரு கட்டத்தில் மஹத்தின் அதீத அன்பே டாப்ஸிக்கு அவஸ்தையாகவே, உறவைத் தவிர்க்கத் தொடங்கினார்.
அப்போது, மனோஜுக்கு ஜோடியாக டாப்ஸி ஒரு தெலுங்குப் படத்தில் நடித்தார். அவருடன் கிசுகிசு பரவியது. அதனால் அந்தப் படப்பிடிப்பில் மஹத் அடிக்கடி போய் தொந்தரவு செய்தார். ஒரு கட்டத்தில், 'மஹத் என்னை ரொம்பவும் தொந்தரவு பண்றார்’ என்று மனோஜிடம் டாப்ஸி புகார் சொன்னார். அந்த ஷூட்டிங்கில் வைத்தே மஹத்தைக் கடுமையாக உதைத்து அனுப்பி விட்டார் மனோஜ். நடந்ததைச் சொல்லி தயாநிதி அழகிரியிடம் அழுது இருக்கிறார், மஹத். 'நான்தான் அப்பவே சொன்னேன்ல நடிகை பின்னால சுத்தாதேன்னு... நீ என்னவோ தெய்வீகக்காதல்னு பினாத்தினே...’ என்று கண்டித்தார். அதன்பிறகும் மஹத்துக்கு டாப்ஸி மேல் இருக்கும் மோகம் தீரவில்லை.
இந்த நேரத்தில்தான் சென்னையில் நடந்த பார்ட்டிக்கு டாப்ஸி வந்திருக்கும் தகவல் தெரியவர, அங்கு ஆஜராகி காதல் மொழி பேசி இருக்கிறார் மஹத். கடுப்பான மனோஜ் மீண்டும் கைவரிசையைக் காட்டிவிட்டார்...'' என்றார்கள்.
போலீஸில் புகார் செய்யப்பட்டு இருப்பது குறித்து 'வாலு’ படப்பிடிப்பில் இருந்த நண்பன் சிம்புவிடம் செல்போனில் புலம்பி இருக்கிறார், மனோஜ். அதனால் இப்போது, தயாநிதி அழகிரியிடம் பேசி போலீஸ் புகாரை வாபஸ் வாங்கச் செய்யும் முயற்சியில் இருக்கிறார் சிம்பு.
மீண்டும் கோடம்பாக்கத்தில் காதல் ரகளை ஆரம்பமாகி விட்டது!

No comments:

Post a Comment