Saturday 4 August 2012

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்








பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

Wednesday 18 July 2012

வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா!



யேசுதாஸ் நல்லவரா?
டி.வி-க்கள்... நாளிதழ்கள்... தொடர்ந்து பார்க்கிறவர்கள் அந்த மனிதர் முகத்தைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது!
கறுப்புக் குல்லா, கறுப்புக் கண்ணாடி, மிகப் பெரிய புன்னகையுடன் சுவரொட்டிகளில், செய்தித் தாள்களில், தொலைக்காட்சியில் நாள்தோறும் காட்சி தரும் அந்த மனிதரின் பெயர் ஐ.பி.யேசுதாஸ். உற்சாகமாகத் தோன்றி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தந்து அசத்துகிறார். அவர் நடந்து வரும்போது பெண்கள் பூ போட்டு வரவேற்கிறார்கள். வட்டியே இல்லாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்குக் கடன் என்கின்றன அந்த விளம்​பரங்கள். ''அடுத்து கட்சி ஆரம்பிக்கப்போகிறார்'' என்றும் சிலர் பீதியைக் கிளப்புகிறார்கள். யார் இந்த யேசுதாஸ்?
'அப்ரோ மைக்ரோ ஃபைனான்ஸ்’ நிறுவனத்​தையும் அதன் உரிமையாளரான அந்த ஏழைப்  பங்காளரையும் பற்றி நமக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாமே முன்னுக்குப் பின் முரணாகவேஇருந்தன.
கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் குறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''கடன் வழங்கும் நிறுவனங்​களை நடத்த ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். கடன் தருபவர் யார்? கடன் வழங்க பணம் எங்கிருந்து வருகிறது என்பதும் மிகமுக்கியம். நீங்கள் குறிப்பிடும் அப்ரோ மைக்ரோ ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனம், ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் இல்லை. எனவே, அவர்களின் பாதை தவறானது என்பது முதலில் தெளிவாகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் மைக்ரோ ஃபைனான்ஸ் என்பதை, நுண்கடன் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட நுண்கடன் வழங்கு​வதற்கு, ரிசர்வ் வங்கி ஏராளமான விதிமுறைகளை வகுத்​துள்ளது. அதன்படி, கடன் வழங்கும் நிறுவனத்தின் நிகரமதிப்பு (பங்கு மூலதனம் உட்பட) 5 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். மேலும், கடன் என்றாலே அதில் வட்டி இருக்க வேண்டும். வட்டி இல்லை என்றால், அதை முன்பணம் அல்லது கைமாற்று என்றுதான் சொல்ல முடியும். இதை ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் செய்ய முடியாது. ஆனால், அப்ரோ மைக்ரோ நிறுவனம் வட்டி இல்லாத கடன் வழங்குவதாக விளம்பரம் செய்கிறது. இது முற்றிலும் தவறான உதாரணம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வரையறை உள்ளது. அதிகபட்சமாக அதில் ஒரு உறுப்பினருக்கு 50 ஆயிரம் மட்டுமே வழங்க முடியும். அதுவும் வேறு எந்தக் கடனும் அவர் பெயரில் இல்லாதபோதுதான் அதையும் வழங்க முடியும். ஆனால் அப்ரோ நிறுவனம், ஆறு லட்சம் முதல் 33 லட்சம் வரை கடன் வழங்குவதாகச் சொல்கிறது. இது முறையற்றது. வட்டி இல்லா சுற்றுலாக் கடன் என்பதெல்லாம் இதுவரை யாரும் கேள்விப்படாதது. இது ஏமாற்று வேலையாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி உடனடியாக இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டோம். ''அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எங்கள் கவனத்​துக்கு வந்துள்ளது. எங்களுடைய ஸ்பெஷல் டீம், அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து  கண்காணித்து வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மகளிர் சுய உதவிக்குழுப் பயனாளிகள் என்ன சொல்கிறார்கள்?
பூந்தமல்லி நாசரேத் பேட்டையில் உள்ள சாய் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடமும், வேலூர் அழகாபுரத்தைச் சேர்ந்த அன்னை தெரசா மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமும் பேசினோம். ''இதற்காக ஏஜென்ட் ஒருத்தர் இருக்​கிறார். அவர் மாசத்துல ஒருநாள் மட்டும்​தான் வருவார். எங்களுடைய விவரங்கள், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், ஒரு பிளாங்க் செக் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு எங்களுக்குக் கடன் கிடைக்க ஏற்பாடு செஞ்சார். கடன் கிடைச்​சா, அதில் அஞ்சு முதல் பத்து பெர்சன்ட் வரை அவருக்கு கமிஷன். கடன் வாங்க​ணும்னா, அப்ரோ நிறுவனத்தில் மெம்பர் ஆகணும். அதுக்கு 2,500 ரூபா கட்டணும். வட்டி இல்லாக் கடன் எல்லாம் கிடையாதுங்க. 100 ரூபாய்க்கு 50 பைசா வட்டி வாங்குறாங்க'' என்றனர்.
அப்ரோவைப் பற்றி எங்கே யாரிடம் விசாரித்​தாலும், வினோதமான தகவல்கள். அதன் நிறுவனர் ஐ.பி.யேசுதாஸைச் சந்திக்க முயற்சித்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பின் தொலைபேசியில் அவரைப் பிடித்தோம். ஆனால், 'நான் யேசுதாஸின் பி.ஏ. சதீஷ் பேசுறேன்' என் றது அந்தக் குரல். ''சார் இப்போ அவுட் ஆஃப் ஸ்டேட். அவர்கிட்ட நேரடியாப் பேச முடி​யாது. இப்போ பேட்டி கொடுக்கும் ஐடியா​வும் இல்லே. நெக்ஸ்ட் மன்த் ட்ரை பண்ணுங்க'' என்றார். மேற்கொண்டு பேச முயன்ற நம்மிடம், ''எனக்கு நிறைய வொர்க் இருக்கு. நான் இவ்ளோ நேரம் யார்கிட்டயும் பேசியதில்லை.'' என்றவர், ''என் னோட நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?'' என்று கேட்டுவிட்டு தொலை​பேசி இணைப்பைத் துண்டித்து விட்டார்.
யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!

குட்பாய் விமலன் ப்ளேபாய் அகிலன்-டபுள் ட்ரீட் மாற்றான்!


''ஓ.கே... இப்ப கொஞ்சம் பேசி டலாம். எனக்கே யார்கிட்டயாவது சொல்லி டணும்னு தவிக்குது. 'மாற்றான்’ல சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். 'கான்ஜாயிண்ட் ட்வின்ஸ்’னு (Conjoined twins) சொல்வாங்க. ஒரே உடம்பு... ரெண்டு மனசு. குணாதிசயங்களும் எதிரெதிர் துருவங்களா இருக்கும். டெக்னிக்கலா ரொம்ப சேலஞ்ஜிங்கான கதை. கிராஃபிக்ஸ் பெர்ஃபெக்ட்டா இருக்கணும். கொஞ்சம் அசந்தாலும் ஏமாத்திரும். சூர்யாவின் இன்னொரு தலையை கம்ப்யூட்டர்ல ஜெனரேட் பண்ணணும். அதில் உயிர் இருக்கணும். எல்லாத்துக்கும் மேலே நீங்க நம்பணும். சூர்யாவுக்கு நாலு கை, நாலு கால், இரண்டு தலை... நல்லா இருக்குல்ல!'' - கண்களின் ரியாக்ஷன் பார்க்கிறார் கே.வி.ஆனந்த். 'மாற்றான்’ படத்துக்காக பிரமாண்ட உழைப்பு கொட்டிய அயர்ச்சி யைத் தாண்டியும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது குதூகலம்.
 ''எங்கே பிடிச்சீங்க இந்த ஐடியாவை?''
'' 'சிவாஜி’க்காக 'ஒரு கோடி சன்லைட்’ பாட்டு ஷூட் பண்ணிட்டு நானும் ஷங்கர் சாரும் ஃப்ளைட்டில் வந்துட்டு இருந்தோம். அப்போ நேஷனல் ஜியாக்ரஃபி பத்திரிகை யைச் சும்மா புரட்டிட்டு இருந்தேன். அதுல பத்து பக்கத்துக்குத் தாய்லாந்தில் ஒட்டிப் பிறந்த குழந்தைகளைப் பத்தின ஸ்டோரி இருந்தது. மனசுக்குள் மின்னல். இந்தியா வந்து இறங்கினதும் அப்படியான குழந்தைகளைத் தேடினால், ஆச்சர்யத் தகவல்களா கொட்டுது. அப்படியே அதை நூல் பிடிச்சுட்டே போனா, செம சினிமாவுக்கான கதை. ரொம்ப பாசிட்டிவ் எண்ணங்கள் உள்ளவனா ஒருத்தனும் வசதி தந்த திமிரால் தடம் மாறியவனா ஒருத்தனும் இருக்காங்க. நிஜத்திலும் அப்படிப் பல ட்வின்ஸ் இருக்காங்க. ஒரே உடம்புல ரெண்டு மனசு!''
''சூர்யாவையே மலைக்கவைக்கிற உழைப்பு தேவைப்படுமே... சமாளிச்சாரா?''
''பின்னிட்டார்! மூணு படங்கள்ல கொட்ட வேண்டிய வேலையை இதில் கொடுத்திருக்கார். 'அயன்’ சமயமே இந்தக் கதையை அவர்கிட்ட சொன்னேன். கேட்டுக்கிட்டார். நான் 'கோ’ முடிச்சதும் 'என்ன ட்வின்ஸ் கதையை இப்போ கையில் எடுக்கலாமா’னு கேட்டார். நிறைய ஹோம் வொர்க் பண்ணிட்டுக் கிளம்பிட்டோம்.
ட்வின்ஸ் சூர்யாவுக்கு அகிலன், விமலன்னு பேர். இதுல விமலன் ரொம்ப நல்ல பையன். கவிதை எழுதுவான், எல்லாருக்கும் உதவி பண்ணுவான், வடைதான் பிடிக்கும், பொய் சொல்ல மாட்டான். அகிலன் அப்படியே ஆப்போசிட். பீட்டர் இங்கிலீஷ், பீட்ஸா பார்ட்டி, டேட்டிங் இளைஞன். விமலன் குட்பாய்னா, அகிலன் ப்ளேபாய். ரெண்டு பேருக்குமான வித்தியாசத்தை நல்லா உள்வாங்கிட்டு, பிரமாதமா பெர்ஃபார்ம் பண்ணார். ஒரே சமயத்துல ரெண்டு அவதாரம் எடுத்த மாதிரி நடிச்சிருக்கார். காமெடிக்குனு யாருமே இல்லை. அதுக்கும் சூர்யாதான் பொறுப்பு!''
'' 'மாற்றான்’, 'துப்பாக்கி’... ரெண்டும்தான் களத்தில் நேருக்கு நேர் மோதுது. இதில் சூர்யா-விஜயைத் தாண்டி, கே.வி.ஆனந்த்-ஏ.ஆர்.முருகதாஸ் போட்டியும் இருக்கே?''
''விஜய் மாஸ் நடிகர். முருகதாஸ் கிளாஸ் இயக்குநர். 'மாற்றான்’, 'துப்பாக்கி’... ரெண்டுமே நல்ல விஷயம்தான். ஒரு ரசிகனா நான் 'துப்பாக்கி’யை எதிர்பார்க்கிறேன். ஆனா, என் 'மாற்றான்’ அவங்களுக்கு எந்தவிதத்திலும் குறையாமல் ரொம்பவே நல்லா இருக்கும்!''
''சட்டுனு பார்த்தா தமிழ் சினிமாவின் 'கமர்ஷியல் கில்லி’ இயக்குநர்களில் உங்களுக்குப் பிரதான இடம்... என்ன மேஜிக் பண்ணீங்க?''
''அதுக்கெல்லாம் சின்ன வயசுல நான் படிச்சு வளர்ந்த புத்தகங்கள்தான் காரணம். கற்பனை யைத் தூண்டும் 'இரும்புக் கை மாயாவி’, 'துப்பறியும் சாம்பு’வோட ரசனையை உயர்த்திய தமிழ்வாணன், சுஜாதா இவங்களுக்கும் அதில் பங்கு இருக்கு. நான் வேலை பார்த்த ப்ரியதர்ஷன், ராஜ்குமார் சந்தோஷி, ஷங்கர், வஸந்த், கதிர் இவங்க எல்லோரும் ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. நான் இவங்க எல்லாருக்கும் முதல் அசிஸ்டென்டா நின்னேன். அவங்க பிரச்னையை என்கிட்ட பகிர்ந்துக்கிட் டாங்க. நான் விளம்பரத்தைப் பாடமா படிச்சிருக்கேன். இப்பெல்லாம் முதல் நாள் தியேட்டருக்கு வந்து பார்க்கிறவங்க வயசு 25-க்கு உள்ளேதான் இருக்கு. மத்தவங்க சீரியல், டி.வி.டி-னு செட்டில் ஆகிடுறாங்க. எந்தப் பொருளை யாருக்கு விக்கிறேங்கிறதுல தெளிவா இருக்கேன். அதேசமயம் இலக்கியம், இலக்கணம் எல்லாம் தாண்டி சினிமா பணம் பண்ணுற விஷயம். அதிலும் நான் தெளிவா இருக்கேன். என்னோட ஸ்பெஷாலிட்டியா நான் நினைக்கிறது... எதிலும் கொஞ்சம் லாஜிக் சேர்த்துடுறது!''
''ரஜினிக்குக் கதை சொன்னீங்கன்னு சொன்னாங்களே?''
''கதை சொல்றதுக்காக நான் ரஜினியைச் சந்திக்கவே இல்லை. ரஜினி தங்கமானவர். நான் பயப்படுறது அவரோட ரசிகர்களுக்காக. நான் ரஜினி சாரைச் சமாளிச்சுருவேன். ஷூட்டிங்ல தன் குடையைத் தானே பிடிச்சுக்குவார். ஆனா, அவர் ரசிகர்கள் எதிர்பார்ப்பைச் சமாளிக்க... எனக்கு இன்னும் பயிற்சி வேணும்!''

Wednesday 11 July 2012

நான் ஈ

நான் ஈ. விமர்சனம்


சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் தமிழில் ரொம்ப குறைவுதான்.. ஷங்கரின் எந்திரன் ரஜினி நடிச்சதால அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் பிரமிப்பு ரஜினியின் ஸ்டார் வேல்யூ முன்னால பெரிசா பேசப்படலை.. எஸ் ஜே சூர்யா நடிச்சு டைரக்ட் செஞ்ச நியூ படம் சயின்ஸ் ஃபிக்சன்ல இருந்து கொஞ்சம் விலகி கில்மா பட ரேஞ்சுக்கு போயிடுச்சு.. அதனால தெலுங்குல Eega என்ற பெயரில்  ரிலீஸ் ஆகும்  ஃபேண்டசி வகைப்படமான நான் ஈ ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு..


 படத்தோட ஒன்லைன் ரொம்ப சிம்ப்பிள்.. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. வில்லன் ஹீரோவை கொலை பண்ணிடறார்.. ஹீரோ ஈ ஆக மறு ஜென்மம் எடுக்கறார்.. எப்படி வில்லனை பழி வாங்கறார் என்பதுதான் கதை..

இனி திரைக்கதை.. ஓப்பனிங்க்லயே வில்லன் தான் அறிமுகம்.. அதுல இருந்தே படத்தோட முக்கியத்துவம் வில்லனுக்கு தெரிஞ்சுடுது.. வில்லன் எந்த மாதிரி ஆள்னா சிம்புவுக்கு அண்ணன், அர்ஜூனுக்கு பாஸ், கார்த்திக்கிற்கு தாதா, எஸ் ஜே சூர்யாவுக்கு குரு ,  கமலுக்கே வழி காட்டி  சுருக்கமா சொல்லனும்னா பொண்ணுங்களை கரெட்க் பண்றதுல மன்னன்.. அதுதான் அண்ணனுக்கு மெயின்  ஜாப்பே.. அது போக நேரம் இல்லாதப்போ ஏதொ தொழில் பண்ணிட்டு தானும் ஒரு தொழில் அதிபர்னு ஊர்ல சொல்லிட்டு திரியறார்..

ஹீரோயின் அம்மா, அப்பா இல்லை, அண்ணி கூட தங்கி இருக்கா.. எதிர் வீட்ல ஹீரோ.. எப்போ பாரு அவ பின்னாலயே ரவுண்டிங்க்.. பாப்பாவுக்கு அது தெரியும்.. பிடிச்சிருக்கு.. ஆனாலும் பிகு பண்ணிட்டு அவனை அலைய விட்டு ரசிக்குது..

 எல்லா சங்கடங்கள், ஈகோவை விட்டு ஹீரோ கிட்டே  ஹீரோயின் லவ்வை சொல்ற டைம் அந்த அசம்பாவிதம் நடக்குது.. அதாவது வில்லன் ஹீரோயினை கணக்கு பண்ண பார்க்கறான்.. ஏதோ சமூக சேவை நிறுவனத்துக்கு டொனேஷன் கேட்க வந்த ஹீரோயினுக்கே 15 லட்சம் தர்றான்.. பாப்பா சம்பளமே  ஒரு படத்துக்கு 40 லட்சம் தான்.. வில்லனுக்கு ஹீரோயின் லவ் தெரிஞ்சுடுது.. தனக்கு இடஞ்சலா வந்த ஹீரோவை டக்க்குன்னு போட்டுத்தள்ளிடறான்..

 ஹீரோ ஒரு ஈயா மறு ஜென்மம் எடுத்து வர்றார்.. இந்த ஐடியா எப்படி வந்திருக்கும்னா ஹீரோ பேரு நிஜ வாழ்விலும் நானி = நான்  + இ  . ஒரு சாதாரண ஈ எப்படி வில்லனை பழி வாங்க முடியும்? அவனை டார்ச்சர் பண்ண முடியும்? கொலை பண்ண முடியும்? அதுக்குத்தான் திரைக்கதை, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அட்டகாசமா பண்ண ஒரு டீம் இருக்கே.. எப்படி பழி வாங்குது என்பதே மீதிக்கதை..

படத்தோட  முதல் ஹீரோ சி ஜி ஒர்க் தான்.. சமீப காலமா பலர் சொதப்பி வந்த கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை இவங்க முறையா, ரசிக்கும்படி, ஓவர் பில்டப் எல்லாம் பண்ணாம செஞ்சிருக்கறதால  ரசிக்க முடியுது.. குறிப்பா அந்த ஈ டிசைன் அட்ட்டகாசம்.. அது டான்ஸ் ஆடுவது, சைகை காண்பிப்பது எல்லாம் அருமை.. 

வில்லன் தான் அடுத்த ஹீரோ..KITCHA SUDEEP . வில்லன் சுதீப் கன்னடத்தில் ஏறக்குறைய சுப்ரீம் ஸ்டார் . படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. ஒரு ரகுவரனோ, பிரகாஷ் ராஜோ செய்ய வேண்டிய கலக்கலான கேரக்டர்.. நல்லா பண்ணி இருக்கார்.. நல்ல எதிர்காலம் உண்டு..

 ஹீரோ நானி சித்தார்த்தின் முகச்சாயல், ஜீவாவின் நடிப்புச்சாயல் என கலந்து கட்டி அடிக்கறார்.. படம் போட்ட 30 வது நிமிடமே அவர் கொலை செய்யப்படுவதால் சான்ஸ் கம்மி./. வந்தவரை ஓக்கே..

 ஹீரோயின் சமந்தா  அழகு.. கண்ணியமான உடைகளில் கவுரமாக வந்து போறார்.. ஆல்ரெடி கலரா இருக்கும் அவர் எதுக்கு ரோஸ் பவுடர் அள்ளி பூசிட்டு வர்றார்? தெரியலை..  சோகமான காட்சிகளில் கூட அதே மேக்கப்.. முப்பத்து நான்கு தேவர்கள் வந்தாலும் அவர்களை கட்டிப்போடும் அழகு..

பேண்டசி வகையில் ரசிக்கத்தக்க படம், ஆல் கிளாஸ் ஆடியன்ஸையும் கவரும்.. குழந்தைகள், பெண்கள் ரசிக்கும்படிதான் படம் இருக்கு..  காஞ்சனாவை தூக்கி சாப்பிடும்னு சொன்னாங்களே அந்த அளவு இல்லை.. ஆனாலும் படம் ஹிட்  தான்.. சந்தானம் ஒரே ஒரு சீனில் 2 நிமிடம் மட்டுமே வர்றார்

டாப்ஸிக்காக 'காதல்' பைட்!

டாப்ஸிக்காக 'காதல்' பைட்!

ரீல் அல்ல ரியல்!
டாப்ஸிக்காக நடந்த கும்மாங்குத்து இது!
கடந்த 8-ம் தேதி இரவு, சினிமா நட்சத்திரங்களுக்கு தன்னுடைய லாயிட்ஸ் ரோடு பங்களாவில் பார்ட்டி கொடுத்தார் ஃபைனான் சியர் பிரதாப்தானே. அந்த விருந்தில் நடிகை டாப்ஸி, மோகன் பாபுவின் மகன் மனோஜ், மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த நேரம், தயாநிதி அழகிரியின் நண்பர் 'மங்காத்தா’ மஹத் விசிட் செய்தார். மனோஜுடன் பேசிக்கொண்டு இருந்த டாப்ஸியிடம் போய் காதல்மொழி பேசி இருக்கிறார். உடனே, ஆத்திரமான மனோஜ் ப்ளஸ் நண்பர்கள் மஹத்தின் மீது பாய்ந்து அடித்துத் துவைத்திருக்கிறார்கள். காயம் அடைந்த மஹத்,  ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், மனோஜ் அவரது அக்கா லட்சுமி மஞ்சு ஆகியோர் மீது புகார் கொடுக்க... கோலிவுட், டாலிவுட் பற்றி எரிகிறது.
என்னதான் நடந்ததாம்? இரண்டு தரப்புக்கும் பொதுவானவர் களிடம் பேசினோம். ''தயாநிதி அழகிரி, 'ஆடுகளம்’ படத்தைத் தயாரித்தபோதே மஹத் - டாப்ஸி காதல் பூத்தது. இருவரும் ஒன்றாகவே ஊர் சுற்றினர். கல்யாணம் செய்துகொள்ளும் அளவுக்கு டாப்ஸியை வெறித்தனமாக நேசித்தார் மஹத். டாப்ஸிக்காகத்தான், நடிக்கும் முயற்சியில் இறங்கினார் மஹத். அஜீத் நடித்த 'மங்காத்தா’ படத்தில் பிரேம்ஜியுடன் நடித்தார். டாப்ஸி தெலுங்குப் படத்தில் பிஸியான பிறகும், அடிக்கடி ஹைதராபாத் பறந்து தனது காதலை டெவலப் செய்தார் மஹத். ஒரு கட்டத்தில் மஹத்தின் அதீத அன்பே டாப்ஸிக்கு அவஸ்தையாகவே, உறவைத் தவிர்க்கத் தொடங்கினார்.
அப்போது, மனோஜுக்கு ஜோடியாக டாப்ஸி ஒரு தெலுங்குப் படத்தில் நடித்தார். அவருடன் கிசுகிசு பரவியது. அதனால் அந்தப் படப்பிடிப்பில் மஹத் அடிக்கடி போய் தொந்தரவு செய்தார். ஒரு கட்டத்தில், 'மஹத் என்னை ரொம்பவும் தொந்தரவு பண்றார்’ என்று மனோஜிடம் டாப்ஸி புகார் சொன்னார். அந்த ஷூட்டிங்கில் வைத்தே மஹத்தைக் கடுமையாக உதைத்து அனுப்பி விட்டார் மனோஜ். நடந்ததைச் சொல்லி தயாநிதி அழகிரியிடம் அழுது இருக்கிறார், மஹத். 'நான்தான் அப்பவே சொன்னேன்ல நடிகை பின்னால சுத்தாதேன்னு... நீ என்னவோ தெய்வீகக்காதல்னு பினாத்தினே...’ என்று கண்டித்தார். அதன்பிறகும் மஹத்துக்கு டாப்ஸி மேல் இருக்கும் மோகம் தீரவில்லை.
இந்த நேரத்தில்தான் சென்னையில் நடந்த பார்ட்டிக்கு டாப்ஸி வந்திருக்கும் தகவல் தெரியவர, அங்கு ஆஜராகி காதல் மொழி பேசி இருக்கிறார் மஹத். கடுப்பான மனோஜ் மீண்டும் கைவரிசையைக் காட்டிவிட்டார்...'' என்றார்கள்.
போலீஸில் புகார் செய்யப்பட்டு இருப்பது குறித்து 'வாலு’ படப்பிடிப்பில் இருந்த நண்பன் சிம்புவிடம் செல்போனில் புலம்பி இருக்கிறார், மனோஜ். அதனால் இப்போது, தயாநிதி அழகிரியிடம் பேசி போலீஸ் புகாரை வாபஸ் வாங்கச் செய்யும் முயற்சியில் இருக்கிறார் சிம்பு.
மீண்டும் கோடம்பாக்கத்தில் காதல் ரகளை ஆரம்பமாகி விட்டது!

Sunday 1 July 2012

வருகிறார் ஆர்த்தி... அலறும் நித்தி...



காக்களோடு கொடைக்கானலில் இருக்கிறார் நித்தியானந்தா. கடுமையான குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறதாம் நித்திக்கு. காரணம் கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் கையில் இருக்கும் ஆர்த்தி ராவின் வாக்குமூலம்.
'நித்தியால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன்’ என்று ஓப்பன் பேட்டி தந்த ஆர்த்தி ராவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை 43. அவர் சொல்லி இருக்கும் காம சமாச்சாரங்கள்,  ஒரு 'பலான’ புத்தகத்தைப் போன்று அங்குலம் அங்குலமாக விரிகிறது. அந்த வாக்குமூலம் முழுவதும் நிர்வாண வார்த்தைகள் மிக அதிகம். அதை அப்படியே வெளியிட முடியாது என்பதால் நாகரிகத் தமிழில் தருகிறோம்.
அமலா (எ) ஆர்த்தி ராவ் (எ) மா நித்ய பிரமேஸ்வரி மாயி!
43 பக்கங்கள் கொண்ட ஆர்த்தி ராவின் வாக்குமூலத்தில் தன்னைப் பற்றியும், சென்னையில் இருக்கும் தன் குடும்பத்தைப் பற்றியும், அமெரிக்காவில் இருக்கும் தன் கணவர், வேலை பற்றி எல்லாம் சொல்லி இருப்பது மூன்றே பத்திகள்தான்.அதன் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பிடிக்கும், விவேகானந்தரைப் பிடிக்கும், அதனால் நித்தியானந்தரைத் தேடி 2004-ல் வந்ததாக அறிமுகம் வாசிக்கிறார். அதன் பிறகு அரங்கேறியவை எல்லாம் 'ஏ’ சர்டிஃபிகேட் காட்சிகள்.
முதல் சந்திப்பு!
''2004 தொடக்கத்தில் ஆசிரமத்தில் சேர்ந்தாலும் டிசம்பரில்தான் நித்தியுடன் நேரடி சந்திப்பு ஏற்பட்டது. முதல் சந்திப்பிலேயே என்னிடம் தன்னை மறந்து நிறைய நேரம் பேசினார். என்னுடைய குடும்பம், கணவர், மனப்பிரச்னைகளை எல்லாம் அவரை குருவாக நினைத்துக் கொட்ட ஆரம்பித்தேன். தனிப்பட்ட வாழ்க்கையும், ஆன்மிக வாழ்க்கையையும் எப்படிப் பிரித்தாள வேண்டும், அதற்கு எந்தெந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சொன்னார். 'என்னுடைய பிரச்னைகளுக்கு எல்லாம் அருமருந்து ஜீவன் முக்திதான்’ என்று என் கைகளைப் பிடித்து அழுத்திச் சொன்னார். 'ஜீவன் முக்திக்குத் தயாராக இருக்கிறாயா?’ என்று கேட்டதும்,  என்னை மறந்து 'தயார்’ என்றேன். அதில் இருந்துதான் அத்தனையும் ஆரம்பம்'' என்று தொடங்குகிறார் ஆர்த்தி ராவ்.
நித்தியின் வியாக்கியானம்
''குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலால்தான் நான் ஆசிரமத்துக்கு வந்தேன். இங்கே வந்து சன்னியாசி வாழ்க்கை வாழ்ந்த பிறகு, எனக்குக் குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அதுநாள் வரை சண்டை போட்டு பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போன நான், தாய்மை அடைய விரும்பினேன். அதன் பிறகு சென்னையில் கொஞ்ச நாட்கள் கணவருடன் வாழ்ந்து தாய்மை அடைந்தேன். அதனை வீட்டில் உள்ள அனைவரும் பெறும் பேறாகக் கொண்டாடினோம். இதனை என்னுடைய குருவிடம் சொல்லி ஆசி பெற வேண்டும் என்று பிடதிக்குப் போனேன். 2005-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பிடதி போனேன். அப்போது, 'குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு ஜீவன் முக்தி அடைய முடியாது. அதனால் கர்ப்பத்தைக் கலைத்து விடு’ என்றார்.
'எனக்குத் தாய்மையும் அடைய வேண்டும், ஜீவன் முக்தியும் அடைய வேண்டும். அபார்ஷன் செய்வது குற்றம் இல்லையா? இதற்காக என்னுடைய கணவரி டம் அனுமதி கேட்க வேண்டும். உங்கள் பேச்சைக் கேட்டு அபார்ஷன் செய்து விட்டால், அவருக்கு எப்படி பதில் சொல்வேன்?’ என்று கேட்டேன்.
'அபார்ஷன் குற்றம் இல்லை. குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு 'ஆன்மா’ இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்’ என்றார். குருவின் பேச்சைக் கேட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் கருவை கலைத்தேன். ஆனால் என் கணவரிடம், 'கர்ப்பம் தானாகவே கலைந்து விட்டது’ என்று பொய் சொன்னேன். எனக்குப் பிடித்த தாய்மையை நித்திக்காக இழந்தேன்'' என்று கதறுகிறார்.
நீதான் எந்தன் தேவி!
2005 ஜனவரி மாத இறுதியில் நித்தி ஒருநாள், 'என்னோடு சேலத்துக்கு வருகிறாயா?’ என்று கேட்டார். 'யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் உனக்குக் கிடைத்து இருக்கிறது. குருவே உன்னை அழைக்கிறார்’ என்று அவரது சீடர் சதானந்தா சொல்லவே கிளம்பினேன். சேலத்தில் ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் முதல் தளத்தில் நித்தி தங்கி இருந்தார். அப்போது நித்தியின் பர்சனல் செகரட்டரியாக இருந்த ராகினி, 'நீ சுவாமிக்கு பெர்சனல் சேவை செய்யப் போ’ என்று என்னை மேல் தளத்துக்கு அனுப்பினார். 'இது உனக்குக் கிடைத்த பாக்கியம்’ என்றும் சொன்னார். நித்திக்கு இரவு உணவு பரிமாறிவிட்டு நின்று கொண்டிருந்தேன். அவர் சாப்பிட்டு முடித்த உடன் கால்களை அமுக்கச் சொன்னார். அழுத்தினேன். பிறகு கதவைத் தாழிடச் சொன்னார். குருவிடம் ஏன் என்று கேள்வியே கேட்கக் கூடாது என்பதால் அதையும் செய்தேன். கதவைத் தாழிட்டு திரும்பும் போது நித்தி என்னை இறுக்கமாக அணைத்து உதட்டில் முத்தமிட்டார். அதிர்ச்சியுடன் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்த போது, 'நீ என்னை முக்தி பெற்ற குருவாக நினைக்கிறாயா?’ என்று கேட்டார். 'ஆமாம்’ என்றேன். 'இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்’ என்று என்னை முழுமையாக மூளைச் சலவை செய்தார்.
'இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி’ என்று சொல்லி என்னை முத்தமிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட மனக் குழப்பத்தில் நான் அனுபவித்த வேதனையைச் சொல்லில் அடக்க இயலாது'' என்கிறார்.
ஆனந்தேஷ்வரா... ஆனந்தேஷ்வரி!
''2005 ஜனவரி 20-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நித்தி ஏற்காட்டில் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கி, வகுப்புகளை நடத்தினார். எனக்குச் சரியான தேதி தெரியவில்லை. வேண்டும் என்றே என்னை அறைக்கு வரவழைத்து இன்பத்தில் ஈடுபடுவார். நான் மறுக்கும் போதெல்லாம், 'நான் ஆனந்தேஷ்வரன்... நீ ஆனந்தேஷ்வரி என்பதை உணர்ந்து நடந்து கொள். இது காமம் அல்ல. கடவுளை அடையும் வழி. என் அன்பைப் பெற்ற நீ பேறு பெற்றவள்’ என்பார். என் உடலால் மட்டுமின்றி மனதாலும் மீறி சிந்திக்கவே இயலாத வண்ணம் நித்தி என்னை ஆக்கிரமித்து இருந்தார். இதற்கு சாட்சி என்னுடைய தந்தை மற்றும் யோகா டீச்சர் வீணா ஜெயராம்''
நீ என் தாய் (எ) மாயி
''என்னைத் தேவியாகச் சித்திரித்து பல முறை இயற்கைக்கு முரணான வகையிலும் உறவு கொண்ட நித்தி, செயின்ட் லூயிஸ் நகரத்தில் இருக்கும் போது என்னை, 'மாயி’ (தாய்) என்று அழைத்தார். 'என்ன சுவாமி என்னோடு இருந்து விட்டு இப்படி அழைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு, 'ஒரு பெண் தாயாகவும் தாரமாகவும் மாறக் கூடியவள். கட்டிலில் மட்டும் நீ தாரமாக இரு. மற்ற இடங்களில் நீ என் தாய். அப்போதுதான் அன்பு அதிகம்’ என சொல்லிக் கொண்டே முத்தமிட்டு என்னை வெறுமனே விழுங்கினார்.''
போதை ஏற்றிய நித்தி
''2006-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். ஒரு நாள் அவர் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பீரோவில் இருக்கும் ஆல்கஹாலை எடுத்து வரச் சொன்னார். பீரோவில் காவி உடைகளுக்கு அடியில் இருந்த மதுவை எடுத்து வந்தேன். ஆசிரமச் சட்டப்படி மதுவைப் பயன்படுத்துவது தவறு. ஆனால் குருவே சொல்லும் போது தட்ட முடியாது. அதில் தண்ணீரே சேர்க்காமல் அப்படியே குடித்தார். ஆச்சர்யமாகப் பார்த்த என்னுடைய வாயிலும் ஊற்றினார். துப்பினேன். ஆனால் மீண்டும் ஊற்றி என்னைக் குடிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி வாந்தி எடுத்தேன். சுய நினைவில்லாமல் அவரது அறையிலேயே படுத்து விட்டேன். காலையில் தெளிந்து எழுந்தபோது உடையின்றிக் கிடந்தேன்.''
வாரணாசியில் தாசி
''நித்தியுடன் 3.11.2006-ல் வாரணாசிக்கு ஆன்மிகச் சுற்றுலாவுக்குச் சென்று இருந்தேன். நித்தியை விஷ்வம் ஹோட்டலில் தங்க வைத்து விட்டு, நானும் மற்றவர்களும் ஹோட்டல் பிளாசாவில் தங்கி இருந்தோம். இரவு 2 மணி இருக்கும் போது கோபமாக நுழைந்த ராகினி, 'உடனே நித்தியின் அறைக்கு போ’ என்று என்னிடம் சொன்னார். அறையில் நுழைந்ததும், 'என்னை ஏன் தனியாக விட்டுப் போனாய். உன்னை தேவி என்று சொல்கிறேனே?’ என்று கோபமாகத் திட்ட ஆரம்பித்தார். எவ்வளவோ மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. பிறகு பணி விடைகள் புரிந்த பிறகு சமாதானம் ஆனார். வாரணாசியில் இருக்கும் போது ஒரு நாள் என்னை, 'தாசி’ என்று சொல்லி அணைத்தார். அப்போது, 'தேவி, தாய் என சொல்லிவிட்டு இப்போது தாசி என சொல்கிறீர்களே?’ என்று கோபப்பட்டேன். 'தாசிதான் இறைவனுக்கு உண்மையான தேவையைப் பூர்த்தி செய்வாள். தாயினும் சிறந்தவள். நீ என் தாசி’ என்றார். ஏதாவது காரணம் கேட்டால், தன்னுடைய ஜீவன் முக்தி புத்தகத்தின் பக்கங்களைச் சொல்லியே விளக்குவார். அதே போன்று கொலம்பஸில் தங்கி இருந்த போதும் நித்தி, என்னை தாசி என்றே அழைத்தார். பிறகு வழக்கம் போன்று என் விருப்பம் இல்லாமலே அனுபவித்தார்.''
கிளாமர் உடைகள், ஆணுறை
''2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் போய் இருந்தோம். அப்போது நித்தி வழக்கமாக அணியும் காவி உடைகளைக் களைந்து விட்டு ஜீன்ஸ், டீ-ஷர்ட், ரேபான் கிளாஸ் அணிந்து கொண்டு என்னோடு ஊர் சுற்றுவார். ஒருநாள் விநய் பரத்வாஜிடம் நைட் கிளப்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கே சாமியார் என்பதை மறந்து, ஆட்டம் போட்டார். அதன் பிறகு ஹோட்டல் அறைக்கு வந்தவுடன் எனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார். அதற்கு இணங்க மறுத்தால், 'உன் ஈகோவைத் தூக்கி போடு. அப்போதுதான் ஜீவன் முக்தி’ என்பார். அப்படி ஒருநாள், 'நான் சொல்வதைச் செய்வாயா?’ என கேட்டவர், 'போய் கிளாமரான உடைகள் அணிந்து செர்ரி கலர் லிப் ஸ்டிக் போட்டு வா. ஆணுறையும் எடுத்து வா. அதுதான் எனக்குப் பிடிக்கும். வா, செக்ஸ் மெடிட்டேட் செய்ய வேண்டும்’ என்று கூறி என்னை அனுபவித்தார். அதே போன்று அமெரிக்காவில் சிவ யோக தாண்ட‌வம், என்று சொல்லியும் என்னை அனுபவித்தார்.''
கும்ப மேளாவில் சில்மிஷம்!
2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்றது. அப்போது ராகினிக்கு உடல் சரி இல்லாததால் சித்ரா நரங், லெனின் கருப்பனுடன் நானும் நித்தியோடு போனேன். அங்கு முழுக்கத் தங்கியது டென்ட்டில்தான். ஒரு மதியப் பொழுதில் நித்தி என்னை அவரது டென்ட்டுக்கு வரச் சொன்னதால் போனேன். அங்கும் என்னைக் கட்டியணைத்து, முத்தமிட்டு இயற்கைக்கு முரணாக செக்ஸ் கொண்டார். 'ஸ்வாமி நீங்கதானே இந்த இடத்தை உலகத்திலேயே புனிதமான இடம் என்று சொன்னீர்கள். நாம் இங்கே இப்படிச் செய்வது அதன் புனிதத் தன்மையை கெடுப்பது போல் ஆகிவிடாதா?’ என்று கேட்டேன். 'புனிதமான இடத்தில் உறவு கொண்டால்தான் விரைவில் ஜீவன் முக்தி அடைய முடியும். நீ இப்போது செய்யும் சேவை உன் ஜீவன் முக்தி மட்டுமல்ல, உன் குருவின் சக்தியையும் கூட்டும்’ என்று சொன்னார்.''
சேடிஸ்ட் மாதிரி அடித்தார்!
''2007 ஏப்ரலில் அமெரிக்காவில் உள்ள வேதிக் கோயிலைத் திறக்க நித்தியோடு போயிருந்தேன். இனியும் நித்திக்கு அடிபணியப் போவதில்லை என்ற மன உறுதியோடு நடந்து கொண்டேன். என்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து, 'உனக்கு அறிவிருக்கா? ஜீவன் முக்தி அடையும் நேரத்தில் இப்படி நடந்து கொள்கிறாயே’ என்று ஆரம்பித்து அதுவரை கேட்டு இராத கெட்ட வார்த்தைகளால் காறி உமிழ்ந்தார். அப்போதும் அடி பணிய மறுத்ததால், என்னை அறைந்தார். அதன் பிறகு வலுக்கட்டாயமாக என்னைப் பலவந்தப்​படுத்தி னார். அவரது ஆசைக்கு ஒப்புக் கொள்​ளாமல் போனால் சேடிஸ்ட் போன்று அடிப்பார். இதனை பல முறை ஆசிரமத்தி லேயே பார்த்​திருக்கிறேன்''
125 ஆண்டு வாழ்வேன்!
''நீண்ட நாட்களுக்குப் பிறகு 2007 டிசம்பர் 31-ம் தேதி பிடதி ஆசிரமத்துக்கு வந்தேன். ஏனென்றால் நித்தியானந்த ஜெயந்தி (பிறந்த நாள்) மற்றும் குரு பூர்ணிமா விழா நடைபெறும். அப்போது அவர் என்னை அழைத்து, 'நீதான் என்னுடைய உண்மை யான தேவி. வா ஜீவன் முக்தி அடையலாம்’ என்று கூறி அனுபவித்தார்.  அதே போன்று 2008 டிசம்பரில் வந்தபோதும் அவ்வாறே செய்தார்.  என்னோடு செக்ஸ் கொண்ட பிறகு, 'இதுதான் தேவி தரிசனம். நான் இப்படியே இருந்தால் 125 ஆண்டு வரை வாழ்வேன். உன்னையும் வாழ வைப்பேன். இப்படியே ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் என்னோடு இரு’ என்றார்''
விநய் பரத்வாஜைக் கற்பழித்தார் நித்தி!
''நித்தியின் செய்கையால் மனசு ரொம்பவே நொந்து போய் கொஞ்ச நாள் இருந்தேன். பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதன் பிறகு மீண்டும் ஆசிரமத்தில் இருந்து நித்தி அழைத்ததால் 2009-ம் ஆண்டு அமெரிக்க டூருக்குத் தயாரானேன். அப்போது அமெரிக்காவில் இருக்கும் சீடரான விநய் பரத்வாஜ், 'உன்னிடம் தவறாக நடந்து கொள்கிறாரா?’ என்று கேட்டார். விநய் பரத்வாஜை அவ்வளவாக தெரியாது என்பதால், 'இல்லை’ என மறுத்து விட்டேன். அப்போது விநய், 'என்னை பல முறை கெடுத்து விட்டார்’ என்று அழுதார். அதன் பிறகு எனக்கு நேர்ந்ததைச் சொல்லி அழுதேன். பிறகு அவர்தான் லெனினிடம் சொல்லி அழ, வீடியோ செட் பண்ணும் திட்டம் ரெடி ஆனது. அதன் பிறகு நிகழ்ந்ததை உலகமே அறியும்'' என்று ஆர்த்தி ராவ் சி.ஐ.டி. போலீஸில் விலாவாரியாகச் சொல்லி இருக்கிறார்.
ஆர்த்தி ராவின் வாக்குமூலம் படு வலிமையாக இருந்தாலும், நித்திக்கு எதிராக இன்னும் நிறைய புகார்களை எதிர்பார்க்கிறது கர்நாடக போலீஸ். அதனால் இதுவரை நித்தியிடம் பெர்சனல் செகரட்டரியாக இருந்த பெண்களின் பட்டியலும், மாண்புக் குரிய அம்மா பட்டம் பெற்ற பெண்களின் பட்டியலையும் கையில் வைத்துக் கொண்டு தேடி வருகிறது. இதை அறிந்துகொண்ட நித்தி தரப்பும் எதிராளிகளை ஆஃப் பண்ணுவதில் மும்முரமாக இருக்​கிறார்கள். மா நித்ய கோபிகாவின் கேரள வீட்டிலும் சி.ஐ..டி போலீஸ் விசார​ணையைத் துவங்கி இருக்​கிறார்கள்.
'ஆண்மை பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, குரல் சோதனைக்காக ஆஜராக வேண்டும்’ என்று ராம்நகர் கோர்ட் கடந்த வாரம் நித்திக்கு உத்தரவு போட்டது. இதனைத் தொடர்ந்து  பெங்களூரு விக்டோரி​யா மருத்துவமனையில்  நித்தியைப் பரிசோதிக்க டாக்டர் மாதவ் ராஜு தலைமையில் ஐந்து மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். அநேகமாக நித்திக்கு அடுத்த வாரம் பரிசோதனைப் படலம் ஆரம்பமாகலாம். அதற்குள் மருத்துவர்களை வளைக்கும் வேலையை நித்தி குரூப் ஆட்கள் செய்து வருகிறார்களாம்.
தூசு தட்டப்படும் கென்னடியின் மர்ம மரணம்
இதுவரை மகளிர் வழக்குகளில் மட்டுமே சிக்கிய நித்தி மீது இப்போது ஒரு கொலைப் புகாரும் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். பெங்களூருவில் நித்திக்கு எதிராக கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து வரும் ஸ்பந்தனா மகளிர் அமைப்பைச் சேர்ந்த வீணா, ''நித்தி ஆசிரமத்தில் கென்னடி என்பவர் 2004-ம் ஆண்டு மர்மமாக இறந்து போனார். மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அதனை விபத்தாக மூடி மறைத்து விட்டார்கள். அது  கொலையாக இருக்கலாம். அதனால் தீவிரமாக விசாரிக்க வேண்டும். சி.ஐ.டி. போலீஸில் அந்த வழக்கையும் இணைத்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறோம். அது மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்'' என்றார்.
கென்னடியின் மர்ம மரண வழக்கை பிடதி போலீஸ் தூசு தட்ட ஆரம்பித்து இருப்பதால்,
இப்போதே பிடதியில் புகைவாசம்!

பரிதாபத்தில் ராமஜெயம் வழக்கு!





ராமஜெயம் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீ சுக்கு மாறப்போகிறது என்ற தகவல் கிடைத்ததும் சிரித்​தவர்​கள்தான் அதிகம்!
ராமஜெயம் கொலை வழக்கை மூன்று மாதங்​களாக டீம் டீமாக... டிசைன் டிசைனாக... விசாரித்துப் பார்த்தும் எந்த உருப்படியான துப்பும் கிடைக்காமல், திணறிக்கொண்டே இருந்தார்கள், திருச்சி போலீஸார். மீண்டும் மீண்டும் விசாரிக்கப்பட்டதால் திருச்சி தி.மு.க. பிரமுகர்களும் பேஸ்தடித்துக்கிடந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. கைகளுக்கு மாறவே, 'மறுபடியும் முதல்ல இருந்தா..?’ என்று அலறுகிறார்கள் ஏற்கெனவே போலீஸிடம் வறுபட்டவர்கள்.
ஜூன் 26-ம் தேதி மாலை திருச்சி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.​மலைச்சாமிக்கு சென்னை தலை​மை அலுவலகத்தில் இருந்து, 'ராம​ஜெயம் கொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களை திருச்சி மாநகர போலீஸிடம் போய் வாங்கிக்​​​கொள்ளுங்கள்’ என்று திடீர் உத்தரவு வந்தது. அதன்படி 1,500 பக்கங்கள்கொண்ட ஆவணங்களை வாங்கிக்கொண்டார் டி.எஸ்.பி. மலைச்சாமி.
மறுநாள் காலை, சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாதா, டி.ஐ.ஜி. ஸ்ரீதர், எஸ்.பி. ராஜேஸ்வரி ஆகியோர் தனித்தனி கார்களில் புறப்​பட்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். ராமஜெயம் உடல் கிடந்த இடத்தைக் காட்டும் வரைபடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, காலை 11.30 மணிக்குக் கிளம்பியது படை. திருவளர்ச்சோலை பகுதியில், ராமஜெயம் உடல்கிடந்த இடத்தை வரைபட உதவியுடன் தேடிக்கொண்டே இருந்தனர். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் உதவி செய்த பிறகுதான், இடத்தை அடையாளம் கண்டார்கள். அங்கிருந்து காரில் கிளம்பி, ராமஜெயம் வாக்கிங் செல்லும் பாதைகளை ஒரு ரவுண்ட் அடித்தனர். அடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நோக்கி பயணித்தனர். அங்கு கமிஷனர் சைலேஷ் குமார் யாதவை சந்தித்துப் பேசினார்கள்.
மன்னார்புரம், காஜாநகர் பகுதி​யில் வாடகை வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் கடந்த ஆண்டு முதல் இயங்கிவருகிறது. ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கக் கூடுதல் போலீஸ் தேவை என்பதால், மத்திய மண்டலத்தில் உள்ள ஐந்தாறு மாவட்டங்களைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மாற்றப்பட்டு இருந்​தனர். அவர்கள் உட்காரக்கூட இடம் இல்லாமல் தெருவில் அலைந்து​கொண்டு இருந்ததுதான் பரிதாபம்.
மாலை 4 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. ''எங்கள் வசம் தமிழகம் முழுக்க 114 வழக்குகள் உள்ளன. எங்களால் கண்டுபிடிக்க முடியாத வழக்கு என எதுவும் கிடையாது. ராமஜெயம் கொலை வழக்கைக் கண்டுபிடிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. நிர்ணயிக்கவும் முடியாது. திருச்சி போலீஸ் எங்களிடம் ஒப்படைத்துள்ள 1,500 பக்க ரிப்போர்ட்டை முழுமையாகப் படித்த பிறகு, இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்குவோம். புதுக்கோட்டை முத்துக்குமார் கொலை வழக்கு, திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு, மதுரை வாடிப்பட்டி சிறுமி நரபலி வழக்கு ஆகியவற்றில் சிறப்பாக துப்புத் துலக்கியதுபோன்று, ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளையும் கண்டிப்பாகப் பிடித்துவிடுவோம்'' என்ற ஐ.ஜி. மஞ்சுநாதாவிடம், ''திருச்சியில் வையம்பட்டியில் நடந்த துரைராஜ், அவரது கார் டிரைவர் கொலை வழக்கு மற்றும் மணிகண்டத்தில் நடந்த துரைராஜின் அண்ணன் தங்கவேல் கொலை வழக்கு ஆகியவை ஐந்து ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி-யால் துப்புத் துலக்கப்படாமல் இருக்கிறதே?'' என்று கிடுக்கிப்பிடி போட்டனர் நிருபர்கள்.
''அந்த வழக்குகளையும் தீவிரமாக விசாரித்துவருகிறோம். எப்படியும் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்'' என்று சமாளித்து முடித்தார்.
திருச்சி போலீஸ் கிளப்பில் தங்கியுள்ள சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி, சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிப்பதுபோல் திருச்சி மாநகரப் போலீஸ் கொடுத்துள்ள அறிக்கையைப் படித்துவருகிறாராம். டி.எஸ்.பி. மலைச்சாமியை தலைமைப் புலனாய்வு அதிகாரியாகக்கொண்டு, அவருக்கு கீழ் ஐந்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் டீம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் எஸ்.பி-யின் உத்தரவுக்​காகக் காத்திருக்கிறார்கள்.
''போலீஸ் கூப்பிடும்போதெல்லாம் விசாரணைக்​குப் போகவேண்டும் என்பதால், எங்களால் கடந்த மூன்று மாதங்களாக நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளக்கூட வெளியூர் போகமுடியவில்லை. இனி, சி.பி.சி.ஐ.டி. டீமும் எங்களது தூக்கத்தைக் கெடுக்கத்தான்போகிறது'' என்ற முணுமுணுப்பு ராம​ஜெயத்துக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் ஒலிக்கிறது.
திருச்சி போலீஸ் நிம்மதிப் பெருமூச்சுவிட, சி.பி.சி.ஐ.டி. திருதிருவென விழிக்கிறது. ஏற்கெனவே, 'சி.பி.ஐ. விசாரணை கேட்போம்’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஒருவேளை சி.பி.ஐ-க்கு இந்த வழக்கு மாறினால்... அவங்களும் இப்படித்தான் வருவாங்க! விசாரிப்பாங்க! பேட்டியும் கொடுப்பாங்க!

Tuesday 26 June 2012

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?



சத்தலான அழகு, அல்ட்ரா மாடர்ன் தோற்றம், நுனி நாக்கு ஆங்கிலம் என்று படு ஸ்டைலாக இருப்பவர்கள்கூட சில சமயம் அருகில் வந்து வாய் திறந்தால், 'குப்’ என்று துர்நாற்றம் தூக்கும். தர்மசங்கடத்தில் நெளிந்து வளைந்து நாம் டான்ஸ் ஆட வேண்டி இருக்கும். ''உயிர் போற அவசரமான வேலையாக இருந்தாலும், அவரிடம் நேரில் சென்று பேச மாட்டேன். போனோட முடிச்சுக்குவேன்'' என்று ஒரு சிலர்குறித்து பயத்தோடும் முகச்சுழிப்போடும் சொல்லப்படுவதற்குக் காரணம்... வாய் துர்நாற்றம்!
ஒழுங்காகவும் முறையாகவும் பற்களை பிரஷ் பண்ணாமல் இருப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முதல் காரணம். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு தடவையாவது பல் துலக்குவது அவசியம். குறிப்பாக, இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னர் பல் விளக்குவது மிகவும் அவசியம்.
சில வெளி சமாச்சாரங்களும் இருக்கின்றன. வெங்காயம், பூண்டு இதெல்லாம் சாப்பிட்டால், அந்த வாடை அதிக நேரம் வாயிலேயே சுற்றிக்கொண்டு இருக்கும். சின்ன வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடுவது பல நன்மைகளைத் தரும். அது ஒரு கிருமிநாசினியும்கூட. ஆனால், வாயில் வெங்காய வாடை லேசில் போகாது.
பொடி போடுவது, வெற்றிலை, புகையிலை, ஜர்தா இந்த மாதிரி ஐட்டங்களைப் பயன்படுத்துவதும் 'வாசனை’ வீசச் செய்யும். புகைப் பழக்கம்பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனை தடவை வாய் கொப்பளித்தாலும் நிகோடின் நாற்றம் போகவே போகாது. மது நிச்சயமாகத் தன்னோட 'வாசனை’யைக் காட்டிக்கொடுத்துவிடும்.
இந்தப் பொதுக் காரணங்களைத் தவிர வேறு என்னென்ன காரணங்களால் வாயில் துர்நாற்றம் ஏற்படும் என்பது குறித்து, மருத்துவர் வி.எஸ்.நடராஜன் விவரிக்கிறார்.
''மருத்துவ மொழியில் வாய் நாற்றத்தை 'ஹாலிடோஸிஸ்’(Halitosis)  என்பார்கள். வாய் நாற்றம் ஏற்பட பாக்டீரியாக்களே முக்கியக் காரணம். வாய்க்குள்ளே அவை வளருவதற்குத் தேவையான ஈரம், வெதுவெதுப்பு, உணவு எல்லாம் கிடைப்பதால் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் ஒவ்வொருவர் வாயிலும் இருக்கின்றன. காலையில் எழும்போது அநேகமாக எல்லோருடைய வாயில் இருந்தும் நாற்றம் வீசும். இது 'ஹாலிடோஸிஸ்’ வகையில் சேராது. பகலில் உமிழ்நீர் வாயில் அதிகமாகச் சுரக்கும். இது பாக்டீரியாக்களைக் கழுவிக்கொண்டு போய்விடும். ஆனால், ராத்திரி உமிழ்நீர்ச் சுரப்புக் குறைவு. அதனால்தான் விடிந்து எழும்போது இந்த 'ஸ்மெல் எஃபெக்ட்’.
உண்மையான பற்களைத் துலக்காவிட்டால் எப்படி வாய் நாறுமோ அதேபோல, செயற்கைப் பற்களையோ அல்லது பல் செட்டோ வைத்திருப்பவர்கள், அதை முறையாகக் கழுவிச் சுத்தம் செய்யாமல் இருந்தாலும் வாய் நாற்றம் ஏற்படும்.
வாயில் புண் இருப்பது அல்லது ஈறுகளில் நோய்த்தொற்று இருப்பது ஆகியனவும் வாய் நாற்றத்துக்குக் காரணங்கள். இதேபோல, தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் நோய்த் தொற்று இருந்தாலும்கூட வாய் நாறும். குடலில் புண் இருந்தாலும் மிகுந்த நாற்றம் அடிக்கும்.
இன்னொரு காரணம் வாய் உலர்ந்து போய்விடுவது. டாக்டரிடம் ஆலோசனை பெற்று சரியான மருந்து உட்கொண்டால் இது சரியாகிவிடும்.
மண்டல நோய்கள் (ஷிஹ்stமீனீவீநீ பீவீsமீணீsமீ) என்று சொல்லப்படும் சிறுநீரகம், இதயம், நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய்கள் இருந்தாலும் வாய் நாற்றம் அடிக்கும். நீரிழிவு நோய் இருந்தால் வாயில் நாற்றத்துடன் சேர்ந்து லேசாகப் பழ வாடையும் வரும். சிறுநீரக வியாதிகள் இருந்தால், லேசாகச் சிறுநீர் வாடை வீசும்!
வயிற்றில் குடற்புழுத் தொற்று இருந்தாலும் சிலருக்கு இந்தப் பிரச்னை இருக்கும். சில சமயம் தொண்டைப் பகுதியில் உள்ள சதை சற்று பலவீனம் அடையும்போது கட்டி ஒன்று தோன்றி, சிறிய பலூன் அளவுக்கு வளர்ந்து பின்னர் உடைந்தும்விடும். அதில் உணவுத் துணுக்குகள் சேரும்போதும் வாய் நாற்றம் ஏற்படும். வாயில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் நாற்றம் அடிக்க வாய்ப்பு உண்டு.
பொதுவாகவே நமக்கெல்லாம் ஒரு வழக்கம். பல்லில் ஏதாவது கோளாறு என்றால்தான் பல் மருத்துவரைப் போய்ப் பாப்போம். ஒரு தொந்தரவும் இல்லையென்றாலும்கூட வருடத்துக்கு ஒருமுறை பல் மருத்துவரைப் பார்த்துப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் வாய் நாற்றம் ஏற்படக் கூடிய பல வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்திக்கொள்ள முடியும்.
நிறையத் தண்ணீர் குடிப்பது நல்லது. அடிக்கடி வாய்க் கொப்பளித்தும் துப்பலாம்.  சிறு தீனிகளை இடையே சாப்பிட்டாலும் வாய் கொப்பளிப்பது அவசியம்.
ஏலக்காயை மெல்வது தற்காலிகமான நிவாரணம் தரும். அங்கீகரிக்கப்பட்ட மவுத் வாஷ்களைப் பயன்படுத்தலாம்'' என்கிறார் நடராஜன்.
மேலே சொன்ன வழிகளை எல்லாம் கடைப்பிடித்தால், பொன் மலர் நாற்றமுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப விளங்குவீர்கள். கவனிக்க... நாற்றம் என்கிற வார்த்தைக்கான பழந்தமிழ் அர்த்தம் நறுமணம்!

பிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏன்?



'ஐஸ்வர்யா ராய் உண்டானாலும் நியூஸ். குண்டானாலும் நியூஸ்!’ என்பது இப்போது பிரபல ஜோக். ரொம்ப காலமாகவே அவர் 'ஃபிஃப்டி கே.ஜி. தாஜ்மஹால்’ ஆகத்தான் இருந்தார். இப்போது தாய்மை தந்த பூரிப்பில் கொஞ்சம் குண்டடித்து இருக்கிறார். பிரசவத்துக்கு முன் மட்டும் அல்ல; பிரசவத்துக்குப் பின்னும் ஐஸ்வர்யாதான் ஹாட் டாபிக்.
ஐஸ்வர்யாவின் எடை கூடிவிட்டதைப் பற்றிய விவாதங்கள் அனல் பரப்புகின்றன. நமக்கு இந்த விவாதம் தேவையற்றது. ஆனால், குழந்தைப் பேறுக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதுகுறித்த அலசல் நிச்சயம் அவசியம். இதுகுறித்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்திடம் கேட்டோம்.
'தன்னுடைய சராசரி எடையைக் காட்டிலும் கர்ப்ப காலத்தில் 10 முதல் 12 கிலோ வரை ஒரு பெண்ணுக்கு எடை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், குழந்தை பிறந்த பிறகு ஆறு முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைவது இயல்பாக நடக்கும் விஷயம். மீதம் உள்ள எடையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும்.
நம் ஊரில், 'தாய்ப்பால் கொடுக்கப்போகிறாய், இரண்டு பேருக்கும் சேர்த்துச் சாப்பிடு’ என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதனால், அளவுக்கு அதிகமான உணவையும் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் இளம் தாய்மார்கள் சாப்பிட்டுவிடுகிறார்கள். உடல் எடை குறையாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். அதேபோல பூண்டு நல்லதுதான். ஆனால், பூண்டை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால், உடல் எடை கூடிவிடும். சுகப் பிரசவம் ஆனவர்களாக இருந்தாலும்சரி, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்களும்சரி... மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, எளிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் சாப்பாட்டை மட்டும் அதிகரித்தால், எடை குறையாது. மாறாக எடை கூடிவிடும்.
தைராய்டு சுரப்புகளில் குறைபாடு, ஹார்மோன் சமன்பாட்டில் பாதிப்பு, கர்ப்பகாலச் சர்க்கரை நோய் போன்ற சில காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படலாம். ஆனால், இவற்றுக்கான வாய்ப்புகள் குறைவு'' என்கிறார் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்.
'ஆரோக்கிய உணவு, மிதமான உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் கர்ப்பக் காலத்தில் அதிகரித்த கூடுதல் உடல் எடையை இரண்டே மாதங்களில் குறைத்துவிட முடியும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார் உடல் எடை மேலாண்மை ஆலோசகரான டாக்டர் சுனிதா ரவி.
''கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், 'பொறுமை’ என்பதுதான். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்துவிடவில்லை. எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது. அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது.  மற்ற பெண்களுடனோ, சினிமா பிரபலங்களுடனோ தங்களை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்பதுதான் முக்கிய அறிவுரை' என்றவர் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ நான்கு வழிகளையும் சொன்னார்.
போதுமான அளவு சாப்பிடுங்கள்
குழந்தைப் பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மன இறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். பசிக்கும்போது சாப்பிடுங்கள். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், காரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச் சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும். அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
தண்ணீர் குடியுங்கள்
உடலின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும். மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும்.
கை கால்களுக்கும் வேலை கொடுங்கள்
உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டிவிடும்.
நேரத்துக்குத் தூங்குங்கள்
இரவு நேரத்தில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்துவிடும். தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது.
பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம். முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நலம்.''

Friday 15 June 2012

காசி ஜெகநாதர் கடவுளுக்கு காய்ச்சல். 15 நாட்கள் நடை சாத்தப்படும் என அறிவிப்பு


உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அஸ்ஸி பகுதியில் கடவுள் ஜெகநாதர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜெய்ஸ்தா பூர்ணிமா (முழு நிலவு) அன்று கடவுளுக்கு புனித நீராட்டல் நடைபெறும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்கள் ஜெகநாதர் சிலைக்கு அளவில்லாமல் புனித நீர் ஊற்றுவர்.
 
அதேபோல், சமீபத்தில் புனித நீர் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களால் ஆயிரக்கணக்கான குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஜெகநாதர் மீது ஊற்றப்பட்டது.   இதன் காரணமாக கடவுள் ஜெகநாதருக்கு, சுகவீனம் ஏற்பட்டது. கடுமையான ஜலதோசம், இருமளால் அவதிப்படுகிறார். கடவுள் ஜெகநாதர் ஒய்வு எடுப்பதற்காக 15 நாட்களுக்கு நடை சாத்தப்பட்டது.
 
இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைந்து குணமடைய பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஜெகநாதருக்கு, அவரது குடும்ப டாக்டர் தினமும் இரண்டு வேளை மூலிகையால் தயாரிக்கப்பட்ட மருந்தை அளித்து வருகிறார்.  
 
என்ன? கடவுளுக்கும் காய்ச்சலா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். இது ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு சடங்கு, சம்பிரதாயம் ஆகும். கடவுளை மனிதப் பிறவியாக பாவித்து செய்யப்படும் சடங்குகளில் இதுவும் ஒன்று.
 
ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில், முழு நிலவு அன்று, ஜெகநாதருக்கு அளவில்லா புனித நீர் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். அதை தொடர்ந்து அதிகளவில் தண்ணீரில் குளித்ததால் சளிப்பிடித்து, இருமல் ஏற்பட்டதாக அறிவித்து கோவில் நடையை சாத்தி விடுவர்.
 
எப்படி மனிதர்களுக்கு டாக்டர் மூலம் சிகிச்சை அளித்து, ஓய்வு கொடுக்கப்படுமோ, அதுபோல் கடவுள் ஜெகநாதருக்கும் செய்யப்படும்.   பண்டிட் ஒருவர் கடவுளுக்கு சேவை செய்யும் டாக்டராக பாவித்து, கடவுள் சிலைக்கு மூலிகையில் தயாரான கலவைகளை தினமும் இரண்டு வேளை பூசுவார். இப்படி பூசுவதால் சிலைக்கு மேலும் சக்தி கிடைப்பதாக ஐதீகம்.
 
தற்போது தெய்வீக டாக்டர் பணியை பண்டிட் ஸ்ரீராம் ஷர்மா (வயது 33). என்பவர் கவனித்து வருகிறார். இதற்கு முன்பு இவரது தந்தை சீதாராம் ஷர்மா தெய்வீக டாக்டர் பணியை கவனித்து வந்தார். அவர் 1995-ல் மரணம் அடைந்தது முதல், அந்தப் பணியை இவர் செய்து வருகிறார்.

ஆமாம், நான் இனத் துரோகிதான்! சீற்றம் குறையாத சீமான்

லைஞரை விட்டால் ஜெயலலிதா... ஜெயலலிதாவை விட்டால் கலைஞர் எனப் பழகிவிட்டது என் இனம். நாதியற்ற இனமாக, சகித்துக்கொள்ள முடியாத இனமாக, இனியும் தமிழினம் இருக்காது. தமிழகத்தில் இருக்கும் திராவிட அரசியல் கட்சிகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். என் இனம், என் மொழி எனச் சொல்லும் தைரியம் இன்றைக்கு அரசியல் நடத்தும் திராவிடத் தலைவர்கள் யாருக்காவது இருக்கிறதா? 'தமிழர் இனம்’ எனப் பேசி அரசியல் நடத்தும் திராவிடக் கட்சித் தலைவர்களுக்கு பெரியாரின் பெயர் ஒரு முகமூடியாகத் தேவைப்படுகிறது. அதனால்தான், எங்கள் கட்சியின் கொள்கை விளக்க ஆவணத்தை வைத்து இப்படி ஆளாளுக்கு அரசியல் கொடி பிடிக்கிறார்கள்'' - சீற்றம் குறையாமல் தொடங்குகிறார் சீமான்.
 நாம் தமிழர் கட்சிக் கொள்கை ஆவணத்தில், 'பெரியார் மட்டுமே திராவிடம் இல்லை’ என்பதுபோல இடம்பெற்று இருக்கும் சில வாக்கியங்கள் பெரியாரிஸ்ட்டுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கின்றனவே என்ற கேள்விக்குத்தான் இப்படி எடுத்த எடுப்பிலேயே தாக்குதலில் இறங்கினார் சீமான்.
''அதற்காக, கொள்கை விளக்க ஆவணத்தில் பெரியாரைத் தமிழர் வளர்ச்சிக்கு எதிரானவராகக் குறிப்பிட்டு இருப்பது நியாயம் ஆகுமா?''
''கொள்கை விளக்க ஆவணம் திருத்துதலுக்கும் மாறுதலுக்கும் உட்பட்டது என்பதை அதில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறோம். மூத்திரப் பையோடு அலைந்த நிலையிலும் சூத்திரப் பிரிவுகளைக் கண்டித்த பெரியார், மண்ணுக்குள் போகும் வரை இந்த மண்ணுக்காகப் போராடியவர். அந்தப் பழுத்த தாடிக் காரரைத் தவிர்த்துவிட்டு, சுயமரியாதை தொடங்கி பெண்ணியம் வரை எதையும் இங்கே பேச முடியாது. ஆவணத்தில் திராவிட அரசியல், தேசிய அரசியல்பற்றிச் சொல்லும்போது, திராவிடம் என்றால் பெரியார் மட்டுமே இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறோம். 'வெள்ளையா இருக்குறவன், பொய் சொல்ல மாட்டான். படிச்சவன் சொன்னா, சரியா இருக்கும்னு நம்பாதே. எதையும் அறிவால் விமர்சனம் செய். விவாதி’ எனச் சொன்னவர் பெரியார். விவாதிக்கப்படும் கருத்துதான் வீரிய வடிவம் எடுக்கும் என்பது அவர் கற்பித்த பாடம். அவர் வழி நின்றுதான் அவர் கொள்கைகளை நாங்கள் அலசுகிறோம். பெரியாரை விமர்சிக்கவே கூடாது என்பவர்கள் பெரியாரிஸ்ட்டா? பெரியாரையும் விமர்சனத்துக்கு உட்படுத் திப் பார்க்கும் எங்களைப் போன்றவர்கள் பெரியாரிஸ்ட்டா?''
''பெரியார் கருத்து குறித்த விவாதம் உங்களைத் தமிழினத் துரோகியாகக் கட்டமைக்க வழிவகுத்து இருக்கிறதே?''
''ஆமாம், நான் இனத் துரோகிதான். என்னைத் திட்டுபவர்களின் இனத்துக்கு நான் துரோகி. நான் துரோகி என்றால், இங்கே வேறு யாருப்பா தியாகி? பெரியா ரின் வாரிசாக மஞ்சள் துண்டுக்குள் உடலை அடைத்துக்கொண்டு வருபவரா? பெரியா ரின் புத்தகங்கள் அரசுடமை ஆகவிடாமல் தடுக்கும் பெரியவர்களா? கொஞ்சமும் குரல் அடங்காதவனாக இப்போதும்சொல் கிறேன்... திராவிட அரசியல் கட்சிகளின் கொட்டம் அடக்கும் சக்தியாக இனி நாங்கள்தான் இருப்போம். அதே நேரம், அரசியல் சாராத திராவிட அமைப்புகளுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரிகள் இல்லை. என்றைக்குமே எங்களின் பெருமைக்குரிய வழிகாட்டி பெரியார்தான். தமிழ்த் தேசிய இனத்தில் பிறந்து தமிழின முகவரியாக, அடையாளமாக, வீரமாக, மானமாக இருக் கும் பிரபாகரன் எங்களின் தலைவன். இதில் மாற்றுக் கருத்து என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.''
''திராவிடர் என்பது மாயை எனச் சிலர் புதிதாகப் பேசக் கிளம்பி இருக்கிறார்கள் என திருமாவளவன் உங்களைச் சூசகமாக வசைபாடி இருக்கிறாரே?''
''நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனித்து நின்று இருந்தால், ஈழத் துயரத்தின் எதிரொலியும் எங்களோடு இயைந்தவர்களின் குரல் ஒலியுமே அவரை அமோகமாக வெற்றிபெற வைத்திருக்கும். இன்றைக்கு இந்த சீமான் தனிக் கட்சி தொடங்கி நடத்த வேண்டிய அவசியமே இல்லாமல் போயிருக்கும். 'திராவிடத் தலைமைகளை வீழ்த்த வேண்டும்’ எனச் சொன்னவரே அண்ணன் திருமாவளவன்தான். அதே திருமாதான் இன்றைக்கு, 'கலைஞர், ஸ்டாலினைவிட நல்ல தலைவர்கள் யாரும் இல்லை’ என்கிறார். அப்படிச் சொல்பவர் ஏன் தனியே கட்சி நடத்த வேண்டும்? பேசாமல் நல்ல தலைவராகிய கலைஞரின் கட்சியிலேயே போய்ச் சேர்ந்துவிட வேண்டியதுதானே? அண்ணன் திருமா அவர்களே... நான் பேசும் அனைத்தும் நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களே தவிர, நான் வேறு எங்கும் கற்றுவரவில்லை.''
''கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் பலரும் உங்களை விமர்சிக்கிறார்களே?''
''அண்ணன்கள்தானே திட்டுகிறார்கள். நன்றாகத் திட்டட்டும். சின்ன வயதில் அப்பா, அம்மா திட்டினார்கள். நல்ல பிள்ளையாக உருவெடுத்தேன். படிக்கும்போது ஆசிரியர்கள் அன்பாகத் திட்டினார்கள். தகுதி படைத்த மாணவனாக உருவெடுத்தேன். இப்போது அரசியல் தளத்தில் அண்ணன்கள் திட்டுகிறார்கள் என்றால், நான் நல்ல அரசியல் தலைவனாக வருவேன் என்பது உறுதியாகிவிட்டது.''
''ஆரம்பத்தில் ஜெயலலிதாவை ஆதரித்துப் பேசினீர்கள்... இந்த ஒரு வருட ஆட்சியிலும் உங்களுக்கு உடன்பாடுதானா?''
''யாரையும் வலிந்து ஆதரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நல்லது நடந்தால் பாராட்டுவோம்; அவலம் நடந்தால் தட்டிக்கேட்போம். சட்டமன்றத்தில் போர்க் குற்றத் தீர்மானம் கொண்டுவந்ததில் தொடங்கி, தூக்கின் நிழலில் அல்லாடும் தம்பிகளுக்காகக் குரல் கொடுத்தவரை அந்த அம்மையாரின் செயல்பாடுகளை நாங்கள் வரவேற்றோம்; வாழ்த்தி னோம். ஆனால், பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு அப்பாவி உயிர்களை இந்த அரசு காவு வாங்கியதை நாங்கள் கண்டித்தோம். இது மிகப் பெரிய வரலாற்றுத் துயரம். இன்றைக்கு ஒரு இடைத்தேர்தலைச் சந்திக்க 32 அமைச்சர்கள், 10 மேயர்கள் ஒரு மாதமாக புதுக்கோட்டையில் அலைந்து திரிகிறார்கள்; பணத்தை இறைக்கிறார்கள். இந்த ஆட்சி எவ்வளவு சிறப்போடு நடக்கிறது என்பதற்கு இந்தக் கேவலமான காட்சிகளே உதாரணம். பால் விலையை உயர்த்தியது தொடங்கி, சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலக இடம் மாற்ற அறிவிப்பு, தேவையற்ற கைதுகள், கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தடுக்கத் தவறியது என இந்த ஆட்சியின் பிழைகள் எக்கச்சக்கம். கேரள வெறியர்களால் சாந்தகுமார் எண்ணெய் ஊற்றிக் கொல்லப்பட்டபோது, ஓர் இரங்கல்கூட அறிவிக்காதவர்தான் நம் முதல்வர். கண்ணீரில் தத்தளிக்கும் சாந்தகுமாரின் மனைவிக்கு நாங்கள் கவர்னர் வேலை கேட்கவில்லை. சாதாரண சத்துணவு ஆயா வேலைதான் கேட்டோம். அதைக்கூட செய்ய மறுத்தவரைப் பற்றி என்ன பேசுவது?''
''விஜயகாந்த்?''
''தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் திராவிடத் தலைவர்களில் வேகமாக அரைப்பவர். தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன உயர்ந்தபட்சக் கொள்கை, ரேஷன் அரிசியை வீட்டுக்கே வந்து தருவதுதான். நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையில், ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் வந்து சமைத்து ஊட்டுவோம் எனச் சொன்னால் எப்படி இருக்கும்? இதுதான் அரசியல் பொருளாதாரக் கொள்கையா? மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இதுதானா? அண்ணன், ஐயாக்கள் செய்த பிழையில் முளைத்த களைதான் விஜயகாந்த். எனக்கு எதிராகப் பாயும் தமிழினத் தலைவர்களைக் கேட்கிறேன்... கட்சி தொடங்கிய ஏழே வருடங்களில் விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் ஆகிறார் என்றால், உங்களின் கையாலாகாத்தனத்தை என்ன சொல்வது? எங்களுக்கு முன்னவர்கள் செய்த பிழையை நாங்கள் செய்யத் தயார் இல்லை. 2016-ல் தேர்தல் களத்தில் நாங்கள் நிற்கிறோம். பத்து ஆண்டுகள் கனவு வேலைத் திட்டம். ஊழலற்ற உண்மையான, நேர்மையான மக்களாட்சியை வெல்ல மாற்றத்துக்காக கருத்துப் புரட்சி செய்கிறோம். 2016-ல் பாய்வோம். 2020-ல் ஆள்வோம்.''
''சரி, 'பகலவன்’ படம் என்ன ஆனது?''
''தண்ணீரால் நனைய வேண்டிய பூமி, கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. என் மக்கள் பிரச்னைகளில் புழுங்கித் தவிக்கிறார்கள். இதையெல்லாம் குறியீடாக வைத்து, 'கல்வி என் மக்களுக்கானது’ என்பதைச் சொல்லும் படம்தான் 'பகலவன்’. முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது. கதை கேட்டு சரி என்று சொன்னவர், ஏன் விலகினார் என்று தெரியவில்லை. இப்போது ஜீவாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஜீவா கட்டாயம் நடிப்பார். படம் வெளியாகும்போது, இந்தப் படத்தைத் தவறவிட்டது தவறு என்பதைத் தவற விட்டவர்கள் உணர் வார்கள்.''
''திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே இருக்க முடிவெடுத்துவிட்டீர்களா?''
''இதுபோன்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவாவது சீக்கிரமே திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்!''

நித்தி ராஜ்ய மர்மங்கள்! விடிய விடிய நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..


காவி உடைகளால் நிரம்பிக் கிடந்த பிடதி ஆசிரமம் இப்போது காக்கி கூடாரமாக ஆகிவிட்டது!  ஆசிரமத்தின் மெயின் கேட் தொடங்கி, மேற்கு மற்றும் கிழக்கு நுழைவாயில்களிலும் நூற்றுக் கணக்கான போலீஸ் நிற்கிறது. ஆசிரமத்தின் 24 மணிநேர நடவடிக்கைகளும் அப்படியே பதிவு செய்யப்படுகிறது. பதிலுக்கு நித்தி தரப்பிலும் வீடியோ பதிவு நடக்கிறது. குறிப்பாக அத்துமீறும் காவல் துறையையும், கன்னட அமைப்புகளையும் மடக்கி மடக்கி படம் எடுக்கிறார்கள் நித்தியின் சீடர்கள்! 
கடந்த 11-ம் தேதி காலை கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடா, 'ஆசிரமத்துக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்படும்’ என்று அறிவித்த உடனே ராம்நகர மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம ரெட்டி தலைமையில் துணை ஆட்சியர் அர்ச்சனா, மாவட்ட எஸ்.பி. அனுபம் அகர்வாலுடன் வருவாய்த் துறை அதிகாரிகளும் ஆசிரமத்துக்குள் நுழைந்தனர். அப்போது ஆசிரமத்தில் இருந்த 200 பேரையும் விசாரித்த‌ அதிகாரிகள், அடுத்து நித்தியின் அறையை சோதனை போட்டனர்.
''பெரிய லேசர் டி.வி., ஆறு இரும்பு பீரோக்கள், லாக்கர் பொருத்தப்பட்ட கட்டில், உடற் பயிற்சிக் கருவிகள் என்று படுஅமர்க்களமாக இருந்தது அவரது அறை. இதுவரை எட்டு இரும்பு பீரோக் களுக்கும், நான்கு முக்கிய அறைகளுக்கும் சீல் வைத் திருக்கிறோம். ஆசிரமம் முழுக்க பல அறைகளில் சோதனையிட இருப்பதால், இந்த வாரம் முழுவதும் இந்த நடவடிக்கை நீடிக்கும்'' என்றார் ராம்நகர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம ரெட்டி.
சிக்கிய கன்டெய்னர்!
ஆசிரம சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் பேசினோம். ''ஆசிரமம் முழுக்கவே ஆவணங்கள்தான். அதுவும் ஆசிரமத்தின் முக்கியஸ்தர்களின் அறைகள், நித்தியின் அறையில் இருந்த பீரோக்களில் எல்லாமே முழுக்கவே‌ ஆவணங்களாகத்தான் இருக்கின்றன. அவரது அறையில் இருந்த கட்டில் லாக்கரில் சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினோம். அதில் சொத்துக்கள் மற்றும் நிதி வந்த விதம் குறித்து முழுத்தகவலும் இருக்கிறது. இவைதவிர, தங்கம், வெள்ளிப் பொருட்களையும் கைப்பற்றி இருக்கிறோம். ஆசிரமத்தில் மர்மமாக இருக்கும் மூன்று கன்டெய்னர்களுக்கு சீல் வைத்திருக்கிறோம். அவை இன்னமும் திறக்கப் படவில்லை. பிரச்னை நடந்த இரவு, ஆசிரமத்தின் பின்புறத்தில் மூன்று மூட்டை ஆவணங்கள் எரிக்கப் பட்டு இருக்கின்றன. அரைகுறையாக எரிந்த அந்த ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.
சிக்கிய ஆணுறை, கஞ்சா, ஆபாச சி.டி-கள்!
பிடதி ஆசிரமம், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் அமைந்து இருக்கிறது. அந்த ஆசிரம காம்பவுண்ட் ஓரத்தில் பயன்படுத்திய ஆணுறைகளும், கஞ்சா, ஆபாச சி.டி-களும், காலி மதுப் புட்டிகளும், நித்தியின் புகைப்படங்களும், புத்தகங்களும் கிடந்ததாம். இவற்றைக் கைப்பற்றிய பிடதி போலீஸ், இதுகுறித்து ரகசிய விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
இவைதவிர ஆசிரமத்தின் உள்ளே, பக்தர்களுக்கு முக்தி வழங்குவதற்காக வைத்திருந்த சில போதை மருந்துகளும் வெளிநாட்டு மது வகைகளும் சிக்கி இருக்கிறதாம். 'இது எல்லாமே எங்களைப் பிடிக்காத‌ கன்னட அமைப்புகள் செய்யும் திட்டமிட்ட சதி. எங்களை இங்கே இருந்து துரத்துவதற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க’ என்று அப்பாவியாகக் பேசுகிறார்கள் நித்தியின் பக்தர்கள்.
சரண்டர் சாமி...
காவல் துறை, ஆசிரமத்தில் சல்லடை போடுவதைக் கண்ட நித்தியானந்தா கடந்த 13-ம் தேதி, தன்னுடைய சீடர் அச்சிலானாந்தா மகா நித்தியானந்தா மூலமாக கர்நாடக  உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'எனக்கும் பிரஸ்மீட்டில் நடந்த சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வேண்டும் என்றே சில கன்னட அமைப்புகளும் என்னைப் பிடிக்காத சிலரும் என் மீது சேற்றை வாறி இறைக்கின்றன. அதற்கு கர்நாடக அரசும் துணை போகிறது. எனவே, பிடதி போலீஸ் என் மீது பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்’ என்று கேட்டு இருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுபாஷ் பி.அடி, இதுகுறித்து ஜூன் 15-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க க‌ர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற நிலவரங்களைக் குறித்துக் கொண்ட நித்தி, மதியம் 3 மணிக்கு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக முடிவெடுத்தார். அவர் மனதை அறிந்த மீடியாவும் கோர்ட்டை மொய்த்தது. மீடியாக்களைத் தவிர்க்க அவரும் காவல் துறையும் பலே நாடகம் போட்டார்கள். மீடியாவிடம், 'நித்தி மதுரையிலே ஆஜர் ஆயிட்டார். அங்கே போங்க’ என்று சொல்லி விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர். தான் தலைமறைவாக இருந்த இடத்தை, மீடியாக்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில ரிஜிஸ்ட்ரேஷன் கார்கள் அணிவகுக்க, கே.எல்.11 ஏஏ 9669 எண் கொண்ட கேரளா ரெஜிஸ்ட்ரேஷன் எண் கொண்ட ஸ்கோடா வெள்ளைக் காரில் வந்து இறங்கினார். உடனே பலரும், 'நித்தி கேரளாவில் இருந்தார்’ என்று கதை கிளப்பினார்கள். உண்மையில், மாண்டியாவில் இருக்கும் ஒரு பக்தரின் பண்ணையில்தான் இருந்தாராம்.
சாமரம் வீசலாமா?
நித்திக்காக கோர்ட் வாசலில் காத்திருந்த கர்நாடக போலீஸ், அவரைக் கைது செய்யாமல் பத்திரமாக கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றது. தன் சீடர்களோடு உள்ளே போன நித்தி, ராம்நகர் மாவட்ட நீதிபதி கோமளா முன்னிலையில் சரண் டர் ஆனார். பத்திரிகையாளர்களையும், கன்னட அமைப்பினரையும் தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரி தன் வக்கீல் முத்து மல்லையா மூலமாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'தன்னை நிபந்தனை இல்லா ஜாமீனில் உடனடியாக விடுவிக்க வேண்டும். இது சாதாரணக் குற்றச்சாட்டு என்பதால் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பக் கூடாது’ என்று தெரிவித்து இருந்தார். நித்தியின் வருகையால் கோர்ட்டில் ஏகக்கூட்டம். அதனால் குற்றவாளிக் கூண்டில் நின்ற நித்திக்கு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போதிய காற்று வரவில்லை. வியர்த்தது. 'சாமரம் வீசலாமா சாமி?’ என்று நித்தியைக் கேட்டபடி நின்றார்கள் சீடர்கள்.
அட்வான்ஸ் அப்ளிகேஷன், சரண்டர் அப்ளிகே ஷன், பெயில் அப்ளிகேஷன் மூன்றையும் தாக்கல் செய்து முடிப்பதற்குள், காவல்துறை சார்பாக ஒரு நாள் போலீஸ் கஸ்டடி கேட்டனர். இதற்கு நித்தி தரப்பு வக்கீல் முத்து மல்லையா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஜாமீன் வழங்க போதிய நேரம் இல்லாததால் நீதிபதி கோமளா, நித்தியானந்தரை  ஒரு நாள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டார். மந்தகாச சிரிப்போடு வெளியே வந்த நித்திக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் போட்டதை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
விடிய விடிய விசாரணை!
ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி நித்தியானந்தாவை, மாகடி போலீஸ் குவாட்டர்ஸுக்கு அழைத்துச் சென்றனர். 'தியானம் செய்ய வேண்டும்’ என்று நித்தி கேட்க அதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு கிடுகிடுவென கேள்விகளை வீசினார், ராம்நகர் மாவட்ட எஸ்.பி. அனுபம் அகர்வால். அவருடைய கேள்விகளுக்குக் கொஞ்சமும் அசராமல் பதில் கொடுத்த நித்தியை போலீஸாரே ஆச்சர்யமாகப் பார்த்தார்களாம். ஒரு கட்டத்தில் வழக்குக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை போலீஸ் கேட்கத் தொடங்கவே, 'பத்திரிகையாளர்களைத் தாக்கிய வழக்கில்தானே கைதாகி இருக்கிறேன். அதுதொடர்பாக மட்டும் கேட்கலாமே?’ என்று கன்னடத்தில் நித்தி பேசியதை காவல்துறையினரும் ரசித்தார்களாம். அதன்பிறகு, அங்கே போதிய இடவசதி இல்லாத காரணத்தால், சென்னப்பட்டினம் போலீஸ் டிரெய்னிங் சென்டருக்கு நித்தியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கேயும் விடிய விடிய விசாரணை நடந்ததாம்.
நஷ்ட ஈடு கேட்ட நித்தி!
மறுநாள் காலை 11 மணிக்கு, நித்தியை ராம்நகர் கோர்ட்டுக்கு அழைத்து வருவார்கள் என்பதால், காலை முதலே மீடியாவும் பொதுமக்களும் குவிந்திருந்தார்கள்.  நித்தியைப் படம் எடுக்க முடியாத இடத்தில் மீடியாக்களை நிறுத்தினர் போலீஸ். 11 மணியைத் தாண்டியும் நித்தி வரவில்லை. விசாரித்துக் கொண்டு இருந்த  எஸ்.பி. அனுபம் அகர்வாலிடம், 'கோர்ட்டுக்குப் போகலாமே?’ என்று நித்தியானந்தாவே, கேட்டாராம். அதற்கு எஸ்.பி., 'நேற்று மதியம் 3 மணிக்குத்தான் விசாரணைக்கு எடுத்தோம். அதனால் இன்று மதியம் 3 மணி வரை நேரம் இருக்கிறது’ என்று சொன்னாராம். எனவேதான் வருகை தாமதம் ஆனது.
ராம்நகர் கோர்ட்டில் நித்திக்கு ஜாமீன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டு இருக்கையில், தன்னுடைய சீடர் மூலமாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவுக்கு எதிராக ஒரு மான நஷ்ட வழக்கைப் போட்டுள்ளார் நித்தியானந்தா. அதில், 'செய்தியாளர்களைத் தாக்கிய வழக்கில் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தன்னை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆசிரமத்தை சீல் வைக்க வேண்டும் என்றும் தன்னுடைய அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட்டார். அப்படி ஒரு முடிவை நீதித்துறை மட்டுமே எடுக்க முடியும். இதனால் எனது புகழுக்கும், என் கோடிக்கணக்கணக்கான பக்தர்களுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு மன உளைச்சலும், ஆசிரமத்தின் பணிகளும் முடங்கி போய் இருப்பதால் அவற்றை சரிசெய்ய 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த விவகாரம் கன்னட மீடியாக்களில் ஒளிபரப்பானதைக் கண்டு முகம் சிவந்தாராம் முதல்வர் சதானந்தா. 'போலீஸ் கஸ்டடியில் இருந்து கொண்டே என் மீது வழக்குப் போடுகிறாரா?’ என்றாராம் கர்நாடக முதல்வர்!
பிடதிக்குப் போகாதே!
முதல் நாள், கூட்டத்தில் மாட்டிக் கொண்டதால், இந்த முறை நித்தியை மிகவும் பாதுகாப்பாக களம் இறக்கியது போலீஸ். அதுவும் சென்னப்பட்டினத்தில் இருந்து வஜ்ரா வேனில் அழைத்து வந்தவர்கள்,  மீடியாக்களின் வெளிச்சத்தில் படாமல் நித்தியை மறைத்து கோர்ட்டுக்குள் கொண்டு போனார்கள். அதைக் கண்டு மீடியாக்கள் கூச்சல் போடவே, கோர்ட் படியில் ஏறிய நித்தி பின்னால் திரும்பி சந்தோஷமாக கை அசைத்தார். பத்திரிகையாளரைத் தாக்கியதாக பதிவான இரண்டு வழக்கிலும், 'பிடதியில் 144 ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு போகக்கூடாது’ என்ற நிபந்தனையோடு நித்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வெளியே வந்த நித்தி உடனே வேனுக்குள் பாய இருந்தார். ஆனால், மீடியா போட்ட கூச்சல் காரணமாக ராம்நகர் எஸ்.பி. அனுபம் அகர்வால், நித்தியின் தோளைப் பிடித்து இழுத்து மீடியா பக்கம் திருப்பினார். உடனே மீடியாவுக்கும் வக்கீல்களுக்கும் பொதுமக்களுக்கும் குனிந்து, குனிந்து வணங்கி விட்டு வஜ்ராவில் ஏறிப் போனார் நித்தியானந்தா.
மீண்டும் கைதான நித்தியானந்தா!
அடுத்த அரை மணிநேரத்தில் இன்னொரு ஆப்பு தயாராக இருந்தது. இதை அறியாமல் பிடதியில் பக்தர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். நித்தியை வரவேற்க வந்த ஆசிரமக் காரில் நித்தியை ஏறவிடாமல், மீண்டும் போலீஸ் வேனில் ஏற்றிய காவல்துறை, ராம்நகர் கலெக்டர் ஆபிஸுக்கு நித்தியைக் கொண்டு சென்றது. தன்னிடம் ஸ்டேட்மென்ட் வாங்குவதற்காக அழைத்து வந்து இருக்கிறார்கள் என்று நினைத்தார் நித்தி.
அப்போது கலெக்டர் ஸ்ரீராமரெட்டி, ''பிடதியில் பொது அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தியதால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 105, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் உங்களைக் கைது செய்கிறோம்'' என்று சொன்னார். அதுவரை சிரித்து கொண்டே இருந்த நித்தியின் முகம் சட்டென்று சுருங்கிப் போனது. ''ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்கள் என்று அழைத்து வந்து, கைது என்றால் எப்படி?'' என்று கலெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நித்தி. ஆனால், கலெக்டர் தனக்குள்ள அதிகாரத்தைத் தெளிவாக விளக்கவே, சட்டென தரையில் அமர்ந்து கொண்டார் நித்தி. அதனால் திணறிப்போன காவல் துறை, ஒரு வழியாக கைது செய்து அழைத்துப் போனது.
'முதல்வர் மீது மான நஷ்ட வழக்கு போட்ட விஷயம்  வெளியானதும், மேலிடத்தில் இருந்து கலெக்டருக்கு ஆக்ரோஷமான உத்தரவு வந்ததாம். அதனால்தான் கைது செய்ய கலெக்டர் உத்தரவு போட்டார்’ என்று சொல்கிறார்கள் கர்நாடக தலைமைச் செயலக வட்டாரத்தில். சதானந்த கவுடாவுடன் நேரடியாக நித்தி மோதத் தொடங்கி இருப்பதால், பூகம்ப அதிர்வுகள் பலமாகத்தான் இருக்கும்.!

 ''என்னத்தைச் சொல்ல?'' 
மனவருத்தத்தில் மதுரை ஆதீனம்
 கடந்த இரண்டரை மாதங்களாக நியூஸ் சுரங்கமாகவும் டென்ஷன் சென்டராகவும் திகழ்ந்த மதுரை ஆதீனம் இப்போது கப்சிப்!
நித்திக்கு எதிராக ஆதீன மீட்புக் குழுவினர் கடும் போராட்டம் நடத்திவந்த போதிலும், மதுரை ஆதீன விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வந்தது. ஒரு கட்டத்தில், நித்தியானந்தா மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்தபோது சர்ச்சை ஏற்பட்டதால், தன்னைப் போலவே இளைய ஆதீனமான நித்தியானந்தாவுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதினார் அருணகிரி. கடந்த 5-ம் தேதி மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த திருஞானசம்பந்தர் குரு பூஜை விழாவின்போது, நித்தியானந்தாவுக்கும் கோயில் சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. இதனால், நித்தியானந்தாவின் நியமனத்தை தமிழக அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாகவே கருதப்பட்டது. பெங்களூருவில் உள்ள நித்தியின் மடத்தில் போலீஸ் ரெய்டு நடந்தபோது, மதுரை ஆதீனத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு கொடுத்தார்கள்.
எப்போதும் திறந்திருக்கும் மதுரை ஆதீனத்துக்கு நித்தியின் சீடர்கள், கடந்த 11-ம் தேதி உள்பக்கமாகப் பூட்டுப் போட்டார்கள். வெளியே கர்நாடக ரிஜிஸ்ட்ரேஷன் என்ட்ரோவர் கார் நிற்பதைப் பார்த்த ஆதீன எதிர்ப்பாளர்கள், 'நித்தியானந்தா உள்ளேதான் பதுங்கி இருக்கிறார்’ என்று கிளப்பி விட்டார்கள். இதைஅடுத்து கர்நாடக போலீஸார் மதுரை ஆதீனத்துக்குள் வந்து, அவரைத் தேடினார்கள். அதன்பிறகே, அவர் அங்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து பூஜைகள் நடக்கத்தான் செய்கின்றன என்று ஆதீனத் தரப்பில் சொல்லப்பட்டாலும், அங்கே முறைப்படி பூஜை செய்யவே ஆள் இல்லையாம். பிரச்னை பெரிதானதும், நித்தியின் ஆண், பெண் சீடர்கள் பலர் மடத்தில் இருந்து வெளியேறி விட்டார்கள். தொடர்ந்து மடத்தில் இருந்தவர்களையும் கர்நாடக போலீஸ¨க்குப் பயந்து, அவர்களது பெற்றோர்களே வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தத் தொடங்கி விட்டனர். அப்படியிருந்தும் பி.இ. பட்டதாரியான ராகவன் வெளியேற மறுத்ததால், அவரை மீட்டுத் தரக்கோரி அவரது பெற்றோர் மதுரை விளக்குத் தூண் போலீஸில் புகார் செய்தனர். 'ராகவன் மேஜர் என்பதால், அவரைக் கட்டாயப்படுத்த முடியாது. அவரை யாராவது தடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று போலீஸார் கையை விரித்து விட்டார்கள்.
தனது பணியாட்களில் பலர் விலகிச் சென்று விட்டதால், தனிமைச் சிறையில் இருப்பதைப் போல் கவலையில் இருக்கிறாராம் பெரியவர். பத்திரிகையாளர்களோடு எப்போதும் நட்பாக இருக்கும் அருணகிரிநாதரை, இப்போது யாரும் தொடர்புகொள்ள முடியவில்லை. எப்போதாவதுதான் போனை அவர் எடுக்கிறார். அப்படி அவரிடம் பேசிய நெருக்கமான நிருபரிடம், ''என்னத்தைச் சொல்ல... பொறுமையாக இருப்போம்'' என்றாராம் அருணகிரி.
''இளைய ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் இருப்பதுபோல், நீக்குவதற்கும் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா?'' என்று அருகில் இருந்தவர் கேட்டபோது 'அதிகாரம் இருக்கிறது. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்று பார்ப்போம். அதுவரையில் பொறு மையாக இருப்போம்'' என்று சோர்வான குரலில் சொன்னாராம் அருணகிரிநாதர்.
ஏற்கெனவே மதுரை ஆதீனம் தொடர்பாக கோர்ட்டில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புதுமையான வழக்கு இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், 'நான் நித்தியானந்தாவின் மாறுபட்ட வழிபாட்டு முறைகளைக் கண்டு அவரது சீடனாக மாறினேன். ஜூன் 11-ம் தேதி மாலை அவரைத் தரிசிக்க மடத்துக்குச் சென்றபோது அங்கிருந்த சீடர்கள், 'நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது’ என்று கூறி வெளியே விரட்டினர்.  அதே நாளில் அவர் அருணகிரிநாதருடன் சேலத்தில் இருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. நித்தியானந்தாவை, அருணகிரிநாதர் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவரை மீட்டு ஆஜர்படுத்துமாறு போலீஸுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பிடதி ஆசிரமம் பார்க்கலாம் வாங்க! நித்தியின் கைதுக்குக் காரணம் ஜெயேந்திரர்?

ல்லாச் செய்திகளும் பிடதியை நோக்கி!
 பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் 32-வது கிலோ மீட்டரில் இருக்கிறது பிடதி. அனைத்துப் பஸ்களும் நின்று கிளம்புகின்றன. அங்கே இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தியான பீடத்தின் நுழைவாயில் இருக்கிறது.
வாசலில் இருக்கும் காவலாளிகள், உங்களைப் பற்றிய அத்தனை விவரங்களையும் கேட்டுத் தெரிந்து​கொண்ட பிறகுதான் கேட்டைத் திறப்பார். செக்யூரிட்டி அறைக்கு அருகே இருக்கும் டேபிளில் ஒரு ரிஜிஸ்டர் இருக்கும். அதில் உங்களது பெயர், முகவரி, செல்போன் எண் என அத்தனையும் எழுதிக் கையெழுத்துப் போடவேண்டும். ஓர் அடையாள அட்டையில் உங்களது பெயரை எழுதி கழுத்தில் மாட்டிய பிறகுதான், உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். இந்த சம்பிரதாயங்கள் நடக்கும் நுழைவாயிலில் இருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது ஆசிரமம்.
நீங்கள் சாதாரண பக்தராக இருந்தால் நடந்துதான் போகவேண்டும். ஆசிரமத்துக்கு நெருக்கமானவர்கள், வேண்டப்பட்டவர்கள் என்றால், செக்யூரிட்டி இன்டர்காமில் தகவல் சொல்வார். உடனே ஆசிரமத்தில் இருந்து கார் வந்து அழைத்துச் செல்லும்.
நடந்து செல்லும் வழியில் பிரமாண்டமான சிவபெருமான் சிலை இருக்கிறது. ஒரு பெரிய குளத்துக்கு நடுவில் சிவன் இருப்பதைப் போன்று வடிவமைத்து இருக்கிறார்கள். நித்தியானந்தரின் பிறந்த நாள் மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த இடம் விழாக்கோலத்துடன் இருக்கும். நித்தியானந்தர் பட்டாடை உடுத்தி வந்து, சிவனுக்குக் குடம் குடமாக பாலும் தேனும் ஊற்றி அபிஷேகம் செய்வார். விடிய விடிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடப்பதும் இங்கேதான். அதையும் கடந்து நடை போட்டால், முதலில் வருவது வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கான விடுதி. அதை ஒட்டி ஓர் இலவச மருத்துவமனை இருக்கிறது. அதைத் தாண்டி உள்ளே செல்வதற்கு சில செக்போஸ்ட் இருக்கின்றன.
முதலில் ஆசிரமத்தின் பிரமாண்டமான வரவேற்பு அறை. யாரைப் பார்க்க வேண்டும், எதற்காகப் பார்க்க வேண்டும் என்று ஒட்டுமொத்த ஜாதகமும் கேட்பார்கள். அதன் பிறகு நீங்கள் சந்திக்க வந்த நபருக்குத் தகவல் சொல்லப்படும். அவர் விருப்பப்பட்டால், உங்களை சந்திப்பார். 24 மணி நேரமும் செயல்படும் இந்த வரவேற்பு அறைதான் பக்தர்களின் போனுக்குப் பதில் சொல்லும் கால் சென்டராகவும் இருக்கிறது. ஆசிரமத்துக்கு வரும் விசாரிப்பு, டொனேஷன் போன்ற பெரும்பாலான விஷயங்கள் இந்த அறையிலேயே ஃபில்டர் செய்யப்பட்டுவிடும்.
அதைத் தொடர்ந்து இருக்கும் ஹாலில், ஈசனின் மடியில் இருக்கும் பார்வதி சிலைக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு இருக்கிறது. நித்தியானந்தர் பிடதியில் இருந்தால், தினமும் காலை 8 மணிக்கு இந்த ஹாலுக்கு வருவார். அங்கே உள்ள சிலைகளுக்கு சுமார் அரை மணி நேரம் பூஜை செய்வார். பூஜை முடிந்த பிறகு, நித்தி அங்கேயே அமர்ந்துகொள்வார். பக்தர்கள் வரிசையில் நிற்க... ஒவ்வொருவராக அழைத்து தலையைத் தடவிக் கொடுத்து ஆசீர்வாதம் செய்வார்.
இந்த ஹாலுக்குப் பின்பக்கத்தில் 600 வருடங்கள் பழமையானதாகச் சொல்லப்படும் ஆலமரம் ஒன்று இருக்கிறது. இந்த ஆலமரமத்துக்கு அடியில்தான் நித்திக்கு ஞானம் கிடைத்ததாகச் சொல்வார்கள். ஆலமரமத்துக்குப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தி சிலை இருக்கிறது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் இந்த ஆலமரத்தைச் சுற்றி, நித்தி வாக்கிங் போவார். அதன்பிறகு அங்கேயே சற்று நேரம் தியானத்திலும் ஆழ்ந்து விடுவார். நித்திக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், இந்த ஆலமரத்துக்கு அடியில் வந்து ஹாயாக அமர்ந்து கொள்வார்.
'எத்தனையோ வசதிகள் இருந்தாலும் இந்த ஆல மரத்தடியில் உட்காருவதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு...’ என்று நித்தியே அவரது அடிப்பொடிகளிடம் அடிக்கடி சொல்வார். ஆலமரத்துக்கு இடதுபுறத்தில் இருக்கும் ஒரு நீண்ட அறை முழுக்க, நித்தி சிறு வயதில் பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்களை வைத்திருக்கிறார்கள். அதோடு நித்தி உட்காந்து ஆசி வழங்குவதைப் போன்ற ஒரு மெழுகுச் சிலையும் இருக்கிறது.
சற்றுத் தள்ளி இருக்கிறது ஆனந்தக்கூடம். நித்திக்காக பிரமாண்ட நாற்காலி, ஃபோகஸ் லைட், வீடியோ கேமராக்கள் என்று பக்காவான செட் அமைப்போடு இருக்கிறது. நித்தி பத்திரிகையாளர்களை சந்திப்பதும், உரை நிகழ்த்துவதும் இந்தக் இந்தக் கூடத்தில்தான்.
இந்த கூடத்துக்கு எதிரில்தான் டைனிங் ஹால். காலை தொடங்கி இரவு வரை யார் ஆசிரமத்துக்குப் போனாலும், சாப்பாடு உண்டு. வரிசையாக அடுக்கி இருக்கும் சில்வர் தட்டை எடுத்துக்கொண்டு, வேண்டி​யதைச் சாப்பிட்டு, தட்டைக் கழுவி வைக்க​வேண்டும். இங்கே சமைக்கப்படும் உணவில் வெங்​காயம், பூண்டு சேர்க்க மாட்டார்கள். (கிளர்ச்சியை ஏற்படுத்தாமல் இருக்க!)
ஆசிரமத்தில் குடும்பத்தோடு வந்து தங்கி இருப்பவர்களுக்கு தனியாக ஒரு குடியிருப்பும், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இன்​னொரு பகுதியிலும் இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். குடும்பத்தோடு இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாம். ஆனால், பகல் நேரத்தில் ஆசிரமத்தில் சேவை செய்ய வேண்டும்.
பிரம்மச்சரியத்தை ஏற்க விரும்புபவர்களுக்கு பல சோதனைகள் வைக்கப்படும். அந்தச் சோதனைகளில் வெற்றி பெறாதவர்களுக்கு பிரம்மச்சரியம் கொடுப்பது இல்லை. பிரம்மச்சரியம் ஏற்ற ஆண்களை 'மஹாராஜ்’ என்று அழைக்கிறார்கள். பெண்களை, 'ம்மா’ என்கிறார்கள். ஆசிரமத்தில் தங்கி இருக்கும் பிரம்மச்சாரிகளில், இன்ஜினீயர்கள், டாக்டர்கள், பேராசிரி​யர்கள் என்று பெரும்பாலும் மெத்தப் படித்த​வர்கள்தான் அதிகம். அவரவர் படித்த படிப்புக்கு ஏற்ப வேலைகள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
இங்கிருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாகத்தான் நித்தி தங்கும் அறை இருக்கிறது. நித்திக்கு எல்லாமுமாக இருக்கும், மூன்று மஹாராஜ்கள் மட்டும்தான் இந்த அறைக்குள் போய்வர முடியும். நித்ய பிரவானந்தா, நித்ய ஞானானந்தா, நித்ய ரூபானந்தா ஆகியோர்தான் அந்த மூன்று மஹாராஜ்கள். மூவருமே சேலம் விநாயகா மிஷன் பல் மருத்துவக் கல்லூரியில் படித்த பல் டாக்டர்கள். சேலத்தில் நித்தியானந்தரின் சொற்பொழிவைக் கேட்டு, அவரது கொள்கைகள் பிடித்துப்போனதால் படிப்பை முடித்த கையோடு ஆசிரமத்தில் சேர்ந்தவர்கள்.
நித்தி விருப்பப்பட்டால் மட்டுமே அவரது அறைக்குள் புதியவர் எவரும் நுழைய முடியும். ஆனால் இப்போது, நித்தியின் அனுமதி இல்லாமலே கர்நாடகப் போலீஸ் நுழைந்து விட்டது!

  கைதுக்குக் காரணம் ஜெயேந்திரர்?
நித்தியின் ஆசிரமத்தை சீல் வைக்கும் அளவுக்கு நிலைமை போனதற்கு, முக்கியக் காரணம் என்று ஜெயேந்திரரைக் கை காட்டுகிறார்கள், நித்தியின் சீடர்கள். ''ரஞ்சிதாவைப் பற்றி ஜெயேந்திரர் அவதூறாகப் பேசினார். அதற்காக ரஞ்சிதா, அவர் மீது வழக்கு தொடர்ந்தார். ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி ஜெயேந்திரர் தரப்பில் பலமுறை பேசினார்கள். ஆனால் சுவாமியோ, 'அது பத்தி எனக்குத் தெரியாது. அது ரஞ்சிதா சம்பந்தப்பட்ட விஷயம்’னு தெளிவாகச் சொல்லி விட்டார். இதில் ஜெயேந்திரருக்கு ரொம்பவும் கோபம். கர்நாடக முதல்வர் கவுடா, ஜெயேந்திரரின் தீவிர பக்தர். அதனால் ஜெயேந்திரர்தான் நடவடிக்கை எடுக்கத் தூண்டி இருக்கிறார். கர்நாடக முதல்வரும், உண்மையை விசாரிக்காமல் ஆசிரமத்துக்குச் சீல் வைக்கச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார். எங்க சுவாமியின் சக்தி என்னன்னு அவருக்குத் தெரியலை, இனி போகப் போகப் புரிந்து கொள்வார்'' என்று ஆத்திரப்படுகிறார்கள் நித்தி சீடர்கள்