Friday 15 June 2012

நடிகை சமந்தாவை, மணிரத்னம் கடலில் இருந்து தூக்கியது ஏன்? புதிய தகவல்


ஹீரோவைவிட மூத்த தோற்றத்தில் இருப்பதால் ‘கடல்’ படத்தில் இருந்து சமந்தாவை நீக்கினார் மணிரத்னம். மீனவர்கள் பிரச்னையை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கும் புதிய படம் ‘கடல்’. இதில் கவுதம் ராம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர்  நடிகர் கார்த்திக்கின் மகன். ஹீரோயினாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இவர்கள் நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. சமந்தா ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கும் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘கடல்’ படத்திலிருந்து சமந்தா விலகினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மணிரத்னம் படத்துக்கு கால்ஷீட் தருவதில் பிரச்னை ஏற்பட்டதால் அதிலிருந்து சமந்தா விலகியதாக கூறப்பட்டது. 
ஆனால் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னமும், கேமராமேன் ராஜீவ் மேனனும் ‘கடல்’ படத்தின் காட்சிகளை சமீபத்தில் திரையிட்டுப்பார்த்தார்கள். அப்போது ஹீரோ கவுதம் தோற்றத்துக்கும், சமந்தாவின் தோற்றத்துக்கும் பொருத்தம் இல்லை என்று இருவரும் நினைத்தனர். 19 வயதே ஆன கவுதம் ராம் இளமை பொலிவுடன் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தாவுக்கு 27 வயது. கவுதமைவிட முதிர்ச்சியான தோற்றத்தில் இருக்கிறாராம். இதை மணிரத்னம் விரும்பவில்லை.
எனவே சமந்தாவை நீக்கிவிட்டு ‘அலைகள் ஓய்வதில்லை’ ராதாவின் மகள் துளசியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார். தற்போது சமந்தாவுக்கு பதிலாக துளசி, கவுதம்ராம் ஜோடியாக நடிக்கிறார். வரும் ஜூலை மாதம் முதல் துளசி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
இதற்கிடையில் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில்,‘எதிர்பாராதவிதமாக மணி சார் படத்திலிருந்து விலகி இருக்கிறேன். இது எனக்கு பெரிய இழப்பு. கால்ஷீட் பிரச்னையால் இதிலிருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment