Monday 16 April 2012

'3' நஷ்டம் : கை கொடுத்த ரஜினி!


Aiswarya-Dhanush


தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 3. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி இருந்த இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.

கொலவெறி பாடலுக்கு உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பு, கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடிப்பு, ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கம் என அனைத்தையும் மீறி படம் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

3 படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி வெளியிட்ட நாட்டி குமார் பெரும் நஷ்டம் அடைந்தார். "தனுஷிற்கு தெலுங்கில் மார்க்கெட் ரேட் அதிகபட்சமே ரூ.10 லட்சம்தான்..

ஆனால் ரஜினி குடும்பத்தினரின் படம் மற்றும் கொலவெறி பாடலுக்கு கிடைத்த  வரவேற்பு உள்ளிட்டவற்றை மனதில் வைத்து எனது நண்பர்கள் அனைவரது பேச்சையும் மீறி இப்படத்தின் உரிமையை 4.3 கோடி கொடுத்து வாங்கினேன்.” என்று தெரிவித்து இருந்தார்.

குசேலன் படம் வரவேற்பை பெறாத சமயத்தில் ரஜினி தானாகவே முன்வந்து விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தினை ஈடுகட்டினார். அது போலவே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தினால் நஷ்டம் அடைந்த நாட்டி குமாரை தொடர்புகொண்டு, அவருக்கு ஏற்பட்ட  நஷ்டத்தினை ஈடுகட்டுவதாக  கூறியிருக்கிறார்கள்  ரஜினியும்,  ஐஸ்வர்யா தனுஷும்..

No comments:

Post a Comment