Friday 20 April 2012

காளான் சாப்பிடலாமே...

 சென்னையில் மாலை நேரங்களில் கூட்டம், கூட்டமாக காளான் சூப் சாப்பிடுவதை பார்க்கலாம். மெத்த படித்தவர்களுக்க ு கூடகாளானின் பலன் தெரியவில்லை. காளான் அற்புதமான உணவு மட்டுமல்ல, மருந்தாகவும் செயல்படுகிறது.
காளான் வகைகள் இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இதில் மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது . காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும ் தன்மை கொண்டது. இதனால்உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. உடலில் அதிகம் தேவையில்லாமல்சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது . இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம்பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவுகுறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற் கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலைமாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவுகுறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம்சத்து தேவை. அவை உணவுப்பொருட்களி ன் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக்குணப்படுத்துகிற து. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள் ளார்கள். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும்காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். காளான் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் தோல் மினு,மினுப்பாகு ம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

No comments:

Post a Comment